செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Monday, 31 December 2018

புதுவருடப்பிறப்பு!

நிகழ்வது எல்லாம் நொடிகளில் நிகழ்ந்தது!
நிற்காமல் வேகமாய் நிமிடம் சென்றது!
மழை போன்று விரைவில் மணி பாய்ந்தது!
கட கட வென காலங்கள் ஓட்டமாய் கடந்தது!

ஆண்டு இறுதி நாளில் வந்தது, இவ்வாண்டில்...
நினைக்க நிறைய ஆனந்தமான தருணமுண்டு!
களித்து சிரித்து மகிழ்ந்த பல நேரமுண்டு!
பி.எஸ்.எல்.வி சீறிப்பாய்ந்து இலக்கை அடைந்ததும் உண்டு!

இயற்கை பேரிடரின் கோரமுகமும் உண்டு!
போராட்டத்தில் உயிர் மாய்த்த தியாகரும் உண்டு!
பலர் பிடியில் சிக்கித்தவித்த சிறுமிகளுமுண்டு!
பல அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்ததுண்டு!

இன்னமும் எல்லாம் சொல்ல செய்தியாகும்!
இதை கூட சொல்லாவிட்டால் பாவமாகும்!

இந்த வருடம் கற்றுத்தந்ததை நினைவில் கொள்வோம்!
சென்றதை விட்டு மீண்டு வெளியே வருவோம்!
வரும் காலம் இனிதாக நிறைவேற, சரியான இலக்கையமைப்போம்!
வள்ளுவன் போல் அதற்கென திட்டமிடுவோம்!
தமிழ் போல் செழித்து வளர்வோம்!
திங்கள் திங்களாய் கதிரவன் போல் ஒளிர்வோம்!

நம்செயலால் அன்பு பெருகட்டும்!
நம் குணத்தால் அறம் தழைக்கட்டும்!
நம் வாழ்வால் தமிழ் சிறக்கட்டும்!

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

-செல்வா



Friday, 28 December 2018

அன்பின் தூரம்!

அருகில் இல்லாத குறையை கைப்பேசி தீர்த்ததோ!
அன்பான வார்த்தைகளை  அலைக்கற்றை கடத்துதோ!
துடிக்கும் இதயத்தை துல்லியமாக மின்செயலி காட்டுதோ!
தூரம் சிறிதானதே தொலைத்தொடர்பு உள்ளவரை!

இன்றளவில் நெருங்கா இடமுமில்லை அடையா சிகரமுமில்லை!
பெண்ணின் இதயமும் அவளின் எண்ணமும் மட்டுமே விஞ்ஞானிக்கும் விளங்கவில்லை!

விண்கலம் ராகுக்கு சென்றாலும்!
செயற்கைகோள் இருமுறை புவியை சுற்றினாலும்,
இவளின் மகிழ்ச்சியோ ஈர்வார்த்தையிலே அடங்கியிருக்கும்!

தேவை என்பதோ இவளுக்கு சிறியதே,
நாம் தேங்கி நிற்க இவள் மனம் விரும்புதே,
அடங்கா அன்பை அமிழ்தமாய் இமிழுதே!
இதுவே மகிழ்வென மனமும் மயங்குதே!

-செல்வா





Tuesday, 25 December 2018

வேலையில்லா பட்டதாரி!

கனவு துரத்தும் பலரில் நானும் ஒருவன்,
கடனை அடைக்க தவிக்கும் பலரில் ஒருவன்,
அடைக்கலம் புக புகலிடமில்லாத ஒருவன்,
உலக விலைவாசிக்கு தேரமுடியாத ஒருவன்,

என்ன தான் பிரச்சனை இங்கு?
என் தலைக்கேறவில்லை இங்கு!
என்னில் பிரச்சனையா?
இல்லை இச்சமூகத்திலா?

எத்தனை எத்தனையோ துயரம் கடந்து படித்தும்,
அத்தனை கனவும் பலிக்கும் என நினைத்தும்,
வந்திங்கு சேர்ந்தோம் ந(க)ரத்தில் புகுந்தோம்!

நடை நடையாய் முகவரி கொடுத்தாகியது,
பல தடவை நேர்முக தேர்வு நடந்தாகியது,
படித்தது கேட்கவில்லை,
கேட்டது தெரியவில்லை!
சிபாரிசிற்கோ ஆளில்லை!
மேல படிக்கவோ வழியில்லை!
வறுமை விட்ட பாடில்லை!

எதுவும் மாறவில்லை மாறும் என்ற நம்பிக்கையை தவிர!

வித விதமாக மின்னொளி மிளிரும் நகரில்,
என்றாவது மிளிரும் நல்குவோர் வாழ்வும் அதன் நலமும்!

-செல்வா







Friday, 21 December 2018

வண்ணம்!

வண்ணம் என்பது வெளியில் இல்லை!
வண்ணம் என்பது நமது பார்வையில் உள்ளது!

ஒரு விரல் போதும் சூரியனை மறைக்க!
ஓர் கூரிய பார்வை போதும் இரையை பிடிக்க!
இரண்டும் பார்வையே வேற்றுமை அதிகமே!

விரல் நகட்டி கண்ணை சற்று குவித்து நோக்குக!
நோக்க ஓராயிரம் பாக்கியம் ஈராயிரம்!

ஓட கால்களுண்டு, உறங்க இடமுண்டு!
கதைக்க உறவுண்டு,
விளையாட கைப்பேசி உண்டு!
கேட்க நல்ல செவி உண்டு,
ஐம்புலம் சீரிய இயக்கமுண்டு,
எத்தனை கொண்டாட்டமிங்கே!
எத்தனை மகிழ்வு இங்கே!

இதனை மட்டுமே பார்ப்போம்!
மற்றவை புறம் தள்ளுவோம்!

மகிழ். திகழ். புகழ்

-செல்வா

Friday, 14 December 2018

தேநீர்ப்பொழுதுகள்!

தேநீர் பொழுதுகளையும்,
தேயாத நீளும்  இரவுகளையும்,
தேடும் பருவம் இளமை பருவம்!
அதிகாலை முதல் அந்தி மாலை வரை,
ஒவ்வொரு கோப்பைக்கான நேரமும் பல உணர்வுகளை,
ரசிக்கவும், கடக்கவும், புது நம்பிக்கை பிறக்கவும் வைக்கிறது!

வாழ்வில் நடப்பதை ரசிக்க,
சற்று தள்ளி நின்று அசைபோட,
தோன்றும் பொழுதல்லவா தேநீர் பொழுது!

நம்பிக்கைக்கு வித்திடும் பொழுது,
நல் திட்டங்கள் தீட்ட உகந்த பொழுது,
களித்திருக்க உவகையான பொழுது,
பிழைத்திருக்க தெம்பூட்டும் பொழுது,
இணைந்திருக்க அன்பு கூட்டும் பொழுது,
சுவைத்திருக்க சுகமூட்டும் பொழுது,
நட்பிற்கோ அதுவே பிரதான பொழுது! 
பல பழுதுகளை சரிபார்க்கும் பொழுது!

தேநீர் பொழுதுகள் ஏற்படுத்திய திருப்பங்கள் பல பல! 
திருப்பங்களை கடப்பதே வாழ்வின் இலக்காகும்! 
எதுவரினும் தினம் ஓர்பொழுது வேண்டும்,
கோப்பை தேநீரோடு எல்லாம் களையும் பொழுதாய்! 
திகழ, மகிழ இன்புற்றிருப்போம்!

-இனிய தமிழ் செல்வா

Sunday, 9 December 2018

தந்தை, தாய் பேண்! 

பாதையறியா பால்யத்தில் பயமில்லை!
பாதைமாறி செல்லினும் ஐயமில்லை!

பருவம் தொட்ட பின்னும் பயமில்லை!
பரந்த உலகமாயினும் தொலைவில்லை!

கல்வி முடிந்த பின்னும் பயமில்லை!
தொழில் மாறி போகினும் ஐயமில்லை!

கணவனான பொழுது சற்று தொற்றியது!
தந்தையான பின்பு முற்றும் பற்றியது!

இத்தனை நாள் இல்லாத ஒழுக்கத்தை,
தந்தை என்ற ஓர் உறவு தருகிறதே!
போதையாய் பேதையாய் இருந்த மனம்,
தன்னிலை கண்டு நிலைகொண்டதே!

கார் இருள் படாமல் நம்வாழ்வு மிளிரவும்,
பிற ஒளி பட்டு குன்றாமல் வாழ்வில் திகழவும்,
நாற்கரம் மல்லவா நம்மை காத்தது,
ஈர் உயிர்களல்லவா தவம் செய்தது,
இதை மறப்பின் ஏதும் கிட்டிலன் வாழ்வில்!

மனிதன் தாய், தந்தையின் அருமை உணர எடுக்கும் காலம் அதிகமே!
சுருங்கிய குடும்பத்தில் இன்னமும் சுருக்கம் வேண்டாமே!

வளர்த்த கடனை அன்பினாலே திருப்பியளிப்போம்!
எவ்வளவு கொடுப்பினும் ஈடுகட்ட இயலா நன்கொடை அது!

அன்பினால் சூழுவோம் பண்பினால் பரிசளிப்போம்!
இந்த நிமிடம் முதல் துவங்குவோம்!

-செல்வா


Thursday, 6 December 2018

எளிமை!

எளிமையை எள்ளி நகைக்கிறார்கள்!
வாழ்வில் செல்வம் உயர ஆடுகிறார்கள்!
ஆடம்பரமே முன்னேற்றம் என்ற மமதை!

எளிமைக்கும் ஆடம்பரத்திற்கும்,
நூல் அளவே வித்தியாசம்!
தேவைக்குச் செய்தால் எளிமை, காண்பிக்கச்செய்தால் ஆடம்பரம்!

வளர்ச்சி எனும் போர்வை ஆடம்பரத்தைக் காக்கிறது!
ஆற,அமர இயங்கும் மனிதனை பறந்து பறந்து ஓடச்செய்கிறது!

எவ்வளவு செல்வம் சேரினும் இன்றளவில் போதுமானதாகவில்லை!
இதைவிட இன்னும் சிறப்பாக வேண்டும் என்று இருப்பதை உணரவில்லை!

ஓர் கடன் வாங்க,
அது சுமையாக மாற,
வண்டிமாடு போல் சுமை,
கடன் சுமை இழுக்கிறார்கள்!
இருப்பதைக் கொண்டு சேமித்து,
வாழ்பவர் நவ உலகின் சாமர்த்தியசாலி!

எல்லாம் சிறப்புற குழந்தைகளுக்கு தர தேவையில்லை!
உங்கள் அன்பை சிறப்புற அளியுங்கள், பொன்னான நேரத்தை அளியுங்கள்!

அன்பான சூழலிலும் அரவணைப்பில் வளரும் குழந்தையே நல்ல குடிமகனாவார்
வீட்டிற்கும் நாட்டிற்கும்!

விழி.எழு.விருட்சமாகுக!

-செல்வா

Monday, 3 December 2018

வாழ்க்கை ஓட்டம்!

வாழ்க்கை ஒரு தொடர் ஓட்டம்,
அதை ஓடித்தான் பார்ப்போம்,

பல வேளை காலுக்கு நல்ல செருப்பு  கிடைக்கலாம்,
சில வேளை ஓட நல்ல தரை கிடைக்கலாம்,
எது கிடைப்பினும் ஓட்டம் நிற்பதில்லையே!

முள் ஏறினாலும் புல் மீது ஓடினாலும் அனுபவமே,
அதை அனுபவிக்காமல் உணர முடியா காரியமே!

ஒவ்வொருவருக்கும் தனித்தனி பாதைகள் இங்கு!
ஒவ்வொருவருக்கும் தனித்தனி வேகங்கள் இங்கு!
ஆனால் பாதைவழி வரும் இடர்கள் எவர்க்கும் உரியதே!

ஓடும் ஓட்டத்தில் சில காலம் துணைவரலாம்,
ஓடும் பாதையில் சில நேரம் இளைப்பாருமிடம் வரலாம்!

தகும் உடல் மனிதன் கொண்டான்,
தடம் பதித்து பாதையில் ஓடலானான்,
புத்தம் புதிய பாதை எங்கும் பிறந்தது,
ஆக்கபூர்வமான பயன் கைமேல் கிடைத்தது!

உலகம் சுற்றினால் தான் இயங்கும்!
மனிதம் ஓடினால் தான் சிறக்கும்!

இங்கு ஓட்டம் என்பது பந்தயமல்ல,
நேர்த்தியான வாழ்வுக்கான தேடலே...

விழி.எழு.விருட்சமாகுக!

-செல்வா



Saturday, 1 December 2018

சிந்தனை அரும்பு!

சொல்ல முடியா துயரத்திற்கு கூட மருந்துண்டு,
ஆனால் தீராத ஆசைக்கில்லை மருந்து இவ்வுலகில்!

காணா கனவு கூட கைகூடும் முயற்சி இருப்பின்!
கிட்ட இருப்பது கூட எட்டாது சோம்பிக்கிடப்பின்!

எழுந்து நின்றால் நடப்பது சுலபமே!
நடக்கப் பழகினால் ஓடுவது
சுலபமே!
ஓட முடிந்தால் இலக்கடைவது  அண்மையே!
இலக்கடைந்தால் சான்றோன் ஆவது எளிதே! 

நமது எண்ணத்தில் என்ன உள்ளதோ,
அதுவே நமக்கு கின்னத்தில் கிடைக்கும்!
எண்ணம் சிறிது பிசக வாழ்க்கையும் பிசகுமே!
எண்ணத்தில் வண்ணம் சேர்க்க வாழ்வும் ஒளிருமே!

எண்ணங்கள் நன்றாக அரும்பட்டும்!
அலராக விரிந்து இனம் பெருகட்டும்!
முகிழாக கமழ்ந்து வாழ்வு மணக்கட்டும்!

விழி! எழு! விருட்சமாகுக!

-செல்வா


Saturday, 24 November 2018

தொலையாத வார்த்தைகள்!

வார்த்தைகள் தொலைவதில்லை,
மெல்ல காற்றில் கலந்துவிடுகின்றன,
காற்றின் வழி காதினுள் புகுந்து,
ரீங்காரமிட்டு மனதில் பதிகின்றன!

அக்கறை கொண்ட வார்த்தைகள் ஆளாக்குகிறது!
ஆளுமை கொண்ட வார்த்தைகள் வார்த்தெடுக்கிறது!

பாசமிகு வார்த்தைகள் அன்பை காட்டுகிறது!
பக்குவமான வார்த்தைகள் இதம் தருகிறது!

இனிமையான வார்த்தைகள் கனிவாய் இனிக்கிறது!
காதல் வார்த்தைகள் வாழ்வை பெருக்குகிறது!

தொலையாத வார்த்தைகளால் இவை சாத்தியம்!
நல்லவை நாவின் கண் உதிர்ப்போம்!

தொலையாத வார்த்தைகளால் பலர் வாழ்வை சிறப்பிப்போம்!

விழி.எழு.விருட்சமாகுக!

-செல்வா

Wednesday, 21 November 2018

இலவசம்!

இலவசம் என்ற ஓர் தொலையாத வார்த்தை!
அரசியல் வாதியின் ஆசை வார்த்தை!
ஒவ்வொரு தேர்தலிலும் புழங்கும் வார்த்தை!
வித விதமான வண்ணம் பூசி வலம் வரும் வார்த்தை!

வளமான வாழ்வு பெற, பசி தீர, பட்டினி தீர
என மீண்டும், மீண்டும் ஒலிக்கும்!
கேட்பவர் மனமோ லயித்துக் குளிரும்!
அன்று தொட்டு இன்றுவரை மாறாமல் ஒலிக்கிறது!

இங்கு எதுவும் இலவசமில்லை,
ஒன்றிற்கு இரண்டாய் வரிகட்ட,
எல்லாம் ஏழை மக்கள் பணமே,
அரசிடம் சென்று திரும்பிவருகிறது!

இலவசம் தவிர்த்து அரசின் கடமை அதீதம்!

படிக்க நல்ல கல்வியகம்,
தரமான மருத்துவமனை,
ஆரோக்கியமான குடிநீர்,
நீர் சேர்க்கும் அணைகள்,
எளிய போக்குவரத்து,
இயற்கை பேணல்,
தவ வேளாண்மை,
உறு பாதுகாப்பு
இது போதும்
மக்களுக்கு
இன்னபிற
அவர்தம்
முயற்சி
தரும்!

கல்வி தரும் நல்வாழ்வு,
வேற்றில் இல்லையே,
மாறுவோம் மாற்றம்
நம்மிடமிருந்தே
தொடங்கட்டும்!

விழி.எழு.விருட்சமாகுக!

-செல்வா






Saturday, 17 November 2018

நாம் இலையாக இருந்தால்...

சந்தோசமாய்... சுதந்திரமாய்...
தென்றலோடு பேசி!
தேனீக்களுடன் குசு குசுத்து!
சூரியனுக்கு வணக்கம் செய்து!
பறவையின் எச்சம் சுமத்து!
அசுத்தக் காற்றை உட்கொண்டு!
பின்பு சுத்தமாக்கி வெளிவிட்டு!
ஒளிச்சேர்க்கை செய்து!
பச்சை பச்சையாய் தளிர்தது,
மேன் மேலும் வளர்ந்து!
ஓர் உரமாய், சருகாய்,
மருந்தாய், தோரணமாய்...
பயணித்திருக்கலாம்...

இலைபோல் தளிர்க்க வேண்டும்!
சுடும் சூரியனிடம் உள்வாங்கி!
அதை கொண்டு உணவாக்கி!
மரம் தளைத்து நிற்க ஊட்மாகி!
என்றும் பசுமயாய் காட்சித்து!
தென்றலுக்கு சத்தம் தந்து!
வீசும் காற்றிற்கு மணமூட்டி!
பனிக்கு படுக்க இடம் தந்து!

ஏதும் அறியாதவை போல் அமைதியாய்,
பசுமையாய் காட்சியளிக்கிறாய்!
உன் போன்ற வாழ்வு எனக்கும் கிட்ட என் செய்வேன் தாயே!
இயற்கையே!!

-செல்வா

Wednesday, 14 November 2018

கடவுளின் எழுத்துப்பிழைகள்!

படைக்கும் பெரியோனே,
பார்போற்றும் வல்லானே!

உன்னை நான் போற்ற பலகாரணமுண்டு,
அதை நீயே அறிவாய் பரம் பொருளே!

பிழைகள் பிழைத்திருப்பவர்களுக்கில்லை பரமனும் எழுத்துப்பிழை புரிவானா என எண்ணி வியக்கிறேன்!

இத்தனை அழகான உலகில்,
எத்தனை அழகு பார்த்து ரசிப்பதற்கு,
ஏனோ பலருக்கு பார்வையில்லை!

இத்தனை இசையான உலகில்,
எத்தனை ஓசைகள் கேட்டு மகிழ்வதற்கு,
ஏனோ பலருக்கு கேட்கும் திறனில்லை!

இத்தனை பரந்த உலகில்,
எத்தனை பாதைகள் நடப்பதற்கு,
ஏனோ பலருக்கு கால்களில்லை!

இத்தனை மொழி கொண்ட இவ்வுலகில்,
எத்தனை சொல்லின்பம் பேசுவதற்கு,
ஏனோ பலருக்கு பேச குரலில்லை!

இதை காணும் பொழுது ஓர் கனம் நான் நலமாய் இருப்பதற்கு நனி நன்றி மொழிகிறேன்!
மறுகனம் படைத்தவனின் எழுத்துப்பிழையை எண்ணி வியக்கிறேன்.

இதை பிழை என்று உரைப்பதில் ஐயமில்லை இறையே!
அனுதினமும் மாற்றுத்திறனோர் படும் வலி கொடியதே!
அவ்வலி கண்டும் இப்பிழை சுட்டாதிருப்பதே தவறு!

-செல்வா

Sunday, 11 November 2018

பறவை!

பறவையே உன் கூட்டில் தங்க ஓர் இடம் தா,
ஓர்நாளாவது விரைந்து தூங்கி எழுவேன்!

பறவையே உன் சிறகை ஓர் நாள் கடன் தா!
பரந்த வானில் சுதந்திர காற்றை ஓர்நாள் சுவாசிப்பேன்!

பறவையே உன் தனித்தன்மையை ஓர் கனம் கற்றுத்தா!
தோல்வி கண்டு துவண்டுவிடாமல் ஒவ்வொரு நாளும் உழைப்பேன்!

பறவையே உன் குரலை ஓர்நாள் கடன் தா!
சண்டையிட்ட காதலியை பாடிக் கவிழ்ப்பேன்!

பறவையே உன் சினேகப்பார்வையை சில நேரம் தா!
பேசப் பயப்படும் மனிதர்களிடம் நம்பிக்கையான நட்பை வளர்ப்பேன்!

உன் போல் இருந்தால் மனிதனுக்கு ஏது துன்பம்?
படைத்த நோக்கத்திற்காக வாழ்ந்தால் அதுவே மனிதற்கு இன்பம்...

-செல்வா


Friday, 9 November 2018

ஆசை!

மேகத்தை அள்ளி தெளித்து கோலமிட ஆசை!
வண்ணத்துப் பூச்சியின் சிறகில் பறந்திட ஆசை!

பூத்திருக்கும் பூவிடம் மயங்கி கிடக்க ஆசை!
காத்திருக்கும் நண்டிடம் மழையாய் பொழிய ஆசை!

வானவில் வண்ணத்தை கடன் வாங்க ஆசை!
அதை வாழ்வில் பூசி சிரித்து மகிழ ஆசை!

காந்தம் வாங்கி நல்ல நேரத்தை கவர ஆசை!
உலக பூசையனைத்தும் எனக்கே பலிக்க ஆசை!

வாழ்வு ஒன்று அதை சிறப்பாய் வாழ ஆசை!
இப்படி வாழ்ந்திட எவரும் விரும்பும் படி வாழ ஆசை!

ஆசைகள் அத்தனையும் கைகூட ஆசை!
ஆசைகள் நிறைவேற்றி ஆசைக்கே ஆசானாக வாழ ஆசை!

-செல்வா


Wednesday, 7 November 2018

அனுபவம்!

தடம் பதித்து நடக்க வந்தாய்!
தடுக்கி விழுந்தும் எழுந்தாய்!
படுத்து கிடக்க வரவில்லை,
ஏதேனும் சாதிக்க வந்தாய்!
சோம்பித்திரிய மனதுடன்,
ஏதேனும் கட்டி எழுப்ப வந்தாய்!

எத்தனை தடை தாண்டி புவி சுழல்கிறது?
எத்தனை மடை தாண்டி நீர் ஓடுகிறது?

மனம் கொண்ட மனிதனுக்கோ தடை ஏதுமில்லை!
வழித்தடம் இல்லை எனில் புதிய பாதை பிறக்கும்!

சென்றதை விட்டு விடு!
இயன்றதை தொடர்ந்திரு!
முன்னேறி சென்று கொண்டிரு!
நாளும் வளர்ந்து கொண்டே இரு!

இங்கு தேங்கி நிற்க நேரமில்லை,
புறம் பேசித் திரிந்து புண்ணியமில்லை,
கனவு நினைவாக களத்திலே வேலை செய்!
கனவை நினைவாக்கிய சிலரில் ஒருவனாய் இரு!

விழி.எழு.விழுமியமாகுக!

-செல்வா


Sunday, 4 November 2018

மேகம்!

நீர் பிடித்து நிற்கும் மேகமே நில்!
கொஞ்சம் மழையாக வந்திங்கு செல்!

நிலவின் தோழனே நீர் குடித்த மேகமே,
சற்றும் சளைக்காமல் இங்கும் அங்கும் சுற்றித்திரிகிறாய்,
மேலும் கீழுமில்லாமல் இடையில் தொங்குகிறாய்!

நான் எங்கு சென்றாலும் என்னையே பின் தொடருகிறாய்!
இன்றெல்லாம் கடலுக்கு வண்ணமடிக்கும் வேலை இல்லையா உனக்கு?

இரவெல்லாம் நட்சத்திரங்களுடன் கும்மாளம் போடுகிறாய்!
மலையை கண்ட உடனே அருகில்  வந்து நலம் விசாரிக்கிறாய்!

மிதக்கும் மேகமே உன்னை போன்று மிதக்க, இங்க பலருக்கு ஆசையே!
மிதக்கும் போதை அறிந்து, பழக்கம் விடாதோரின் ஓசையே அதிகம்!

உன்னைப்போன்று கர்வமில்லாமல் இருக்க மனிதன் கற்றால் போதும்!
ஊரில் உதவி பெருகும், ஏழ்மை குறையும்!
பண்பு சிறக்கும், அன்பு தழைக்கும்!

நாளும் உன் போல் மிதக்க நினைக்கும் யாசகனை நினைவில் கொள்வாய்!

-செல்வா






Friday, 2 November 2018

சாதி என்னும் சதி!

காதல் கூட இன்று சாதி பார்த்துத்தான் ஒன்று சேரும்,
இல்லையேல் இடையில் இருமினாற் போல் அந்து போகும்!

வள்ளுவன் வாழ்ந்து ஈராயிரம் ஆண்டு கழிந்த பின்னும்,
கழியாமல் வீசுதிந்த சாதி நாற்றம் இன்னும்!

வேர்விட்டு வளர்ந்திட்ட சாதி இன்று விழுதோடு நிற்குது!
பெரும் காற்றிலும், புயலிலும் அது விழாம தப்புது!

எங்கு ஓடி ஒளிந்தாலும் விடாமல் துரத்துது,
பிறப்பிலே வந்தது சவக்குழி வர தொடருது!

படிப்பு கொடுத்தா முன்னேறி மறந்திடுவான்னு, சோறு போட்டு படிக்க வச்சா.
இன்னைக்கு படிச்சுப்புட்டு தனித்தனியா ஆளுக்கொரு சாதிச்சங்கம் வச்சான்.

இருந்த தலைவரை எல்லாம் சாதி வாரியா பிரிச்சிட்டான்,
அவர் பேரு புகழ சுருக்கிட்டான்.

பிரிந்து நின்றே இனத்தை காவு கொடுத்திட்டான்!
தமிழினம் என்ற பெருமை மறந்து,
சாதி என்னும் சிறுமையிலே தங்கிட்டான்!

இனி என்ன இருக்கு இவனிடம் மிச்சம்!
பல சாதிக்கொடி தான் பறக்குது உச்சம்!
இது தமிழினத்திற்கான அச்சம்!
விழித்திட்டால் ஏற்படும் மாற்றம்!

விழி.எழு.ஒன்றுபடு!

-செல்வா

Monday, 29 October 2018

நட்புத்தோழி!

கனா ஒன்று கண்டேன் தோழி, அதில் நீ உலா வரக்கண்டேன் தோழி!

காலை முதல் இரவு வரை உடனிருந்தும்,
பொழுது பற்றாமல் கனாவிலும் வந்தாயே தோழி!

நீ உடனிருக்கும் பொழுதிற்கு தனி அர்த்தங்கள் பிறக்கின்றன!
என் உடன் பயணிக்கும் பொழுதிற்கு புது வரையறைகள் பிறக்கின்றன!

என் வளர்ச்சியில் உனக்கேன் அவ்வளவு அக்கறை தோழி!
வழி தெரியா பாதையில் சென்றேன் தோழி!
அதை விளக்க தக்க மனிதரில்லை தோழி!
சொன்னவர்களுக்கோ அனுபவம் அதிகம் தோழி!
ஆனால் சொல்லும் முறை முழுவதும் பிழையே தோழி!

வந்த நாளிலே என்னை புரிந்து கொண்டாய் நீயே!
இந்த நாளிலே உன்னை அறிந்து கொண்டேன் நானே!
இப்படி ஓர் நட்பு கிட்ட அந்த மூவேந்தரும் யாசிப்பர்!

நட்பென்னும் நன்நிலத்தில் தெளித்த விதை எல்லாம் விருட்சமே! 
உன் போல் ஓர் தோழி தினமும் தோள் கொடுப்பின்! 
சாத்தியமில்லா காரியமும் சாத்தியமே! 

வாழி என் தோழி. நீ வாழி!

-செல்வா

Saturday, 27 October 2018

நட்சத்திர இரவு!

நீல வானமே நீண்டு கொண்டே போகிறாயே!
மைதெளித்த மேகக் கூட்டமே பரந்து கிடக்கிறாயே!

மெய் ஒளி வீசும் நட்சத்திரமே தூரம் நிற்கிறாயே!
பால் ஒளி வீசும் வெள்ளி நிலவே சுற்றித் திரிகிறாயே!

வருடிச் செல்லும் தென்றல் காற்றே எங்கேயோ செல்கிறாயே!
இரவில் மஞ்சம் கொண்டேனே உங்கள் அழகில் மயங்கி சொக்கவே!

மாற்று உலகிலும் கிடைக்காத பாக்கியம் இது!
மனதை திருடும் இரவு என்றும் கண்ணில் தெரியட்டும்!

-செல்வா

Wednesday, 24 October 2018

மன்னிப்பாயா?

நட்பென்னும் பந்தலில் விரிசல் விட்டு நீர் சொட்டக் கண்டேன்! 
கசியும் நீர் தெருவெல்லாம் வழிந்தோடக்கண்டேன்!
நேற்றுவரை சிரித்து மகிழ்ந்த நெஞ்சம் வாடக்கண்டேன்!

கொடி படர்ந்த பந்தலிலே விச பாம்பினால் விரிசல் வந்ததோ?
இல்லை வழிபோக்கு காகமிட்ட முள்ளினால் விரிசல் வந்ததோ?

பார்த்த விசயங்கள் கண்களுக்கு அப்பாலே!
கேட்ட விசயங்கள் காதுகளுக்கு அப்பாலே!
என விவரம் அறிந்து பேசமால், ஆத்திரத்தில் வந்த கோபம் வாகை சூடிக்கொண்டதே!

நாளோடு மெருகும் நட்பு நடைமிதியாய் போனது! 
போனது திரும்பாது, இன்றோ நான் உணர்கிறேன் பிழையை! 
திருந்த ஓர் வாய்ப்பளிப்பாயா!
நட்பென்னும் பந்தலை இருகரம் கொண்டு தைத்திடுவோம்! 
ஒருமுறை மன்னிப்பாயா!
மன்னிப்பாயா?

-இனிய தமிழ் செல்வா

Monday, 22 October 2018

எண்ணம் போல் வாழ்வு!

ஒருவருக்கு எண்ணம் திடமெனில்,
அந்தியும் தலை சாய்க்கும்,
ஆகாயமும் நீர் சுரக்கும்,
இமயமும் ஏற இடம் தரும்,
ஈர மண் சிற்பமாய் மாறும்,

உலகில் முன்னேற்றம் வரும்,
ஊழ் முயற்சி வெற்றி பெரும்,
எண்ணம் போல் நிறைவேறும்,
ஏணி போல் வாழ்வு உயரும்,

ஐயமின்றி வாழ்வு மிளிரும்,
ஒன்று பட்ட முயற்சி கைகூடும்,
ஓடி உழைத்த பலன் கிடைக்கும்,
ஔவை கூற வில்லை, இது வாழ்வின் அனுபவம்,
அஃதே எண்ணம் இருப்பின் வாழ்வு வளமே!

-செல்வா

Tuesday, 16 October 2018

எதிர்பார்ப்பு!

வாழ்க்கை முன்னேறும் என்பதே நாளும் உழைக்கும் மக்களின் எதிர்பார்ப்பு!
கல்வி வாழ்க்கையில் உயர்த்தும் என்பதே ஏழை குடிமக்களின் எதிர்பார்ப்பு!

வெளிநாட்டில் வேலை செய்து விரைவில் கடன், கடமைகளை அடைப்பதே பரதேசியின் எதிர்பார்ப்பு!
ஆசை பட்ட எல்லாவற்றையும் அழுது வாங்கிவிடலாம் என்பதே குழந்தையின் எதிர்பார்ப்பு!

எதிர்பார்ப்புகள் இல்லாத வாழ்வில்லை யாருக்கும்!
எதிர்பார்ப்பு பலிக்க செய்யும் முதலீடு தெரியவில்லை பலருக்கும்!

உழைக்காமல் இருந்தால் முன்னேற்றமில்லை!
கற்காமல் இருந்தால் உயர்வில்லை!
துயில் எழாமல் இருந்தால் எழுச்சியில்லை!
சேமிக்காமல் இருந்தால் செல்வமில்லை!

எதிர்பார்ப்பு பலிப்பது நம் கையிலே!
அதை சிலர் உழைப்பு என்பர், சிலர் புண்ணியம் என்பர்,
இன்னும் பலர் அதிர்ஷ்டம் என்பர்!
எது எப்படியாகினும் உனது முயற்சியே உனது எதிர்பார்ப்பை நிறைவேற்றும் கருவியாகும்!

விழி.எழு.விருட்சமாகுக!

-செல்வா


Sunday, 14 October 2018

இடைவெளி!

பிறப்பிற்கும் இறப்பிற்கும்மான இடைவெளி வாழ்க்கை!
இருப்பதோ எண்ணிவிடும் நாட்கள் இவ்வுலகில்!
இதில் எத்தனை சண்டைகள் எத்தனை வேற்றுமைகள்!

மனிதன் பறந்து திரியவே பெரிய உலகம் வைத்தான் இறைவன்!
மனிதனோ தனக்கொரு சாதி, மதம் என கூட்டம் கண்டு தேங்கலானான்!
அதில் அவன் பெருமை இருப்பதாய் உணர்ந்தும் கொள்கிறான்!

சாதிகளை சாலையிலே விட்டு விடவும், 
மதங்களை வீட்டின் மதில் சுவரில் விட்டு விடவும்,
சற்று எட்டிப்பாருங்கள் மனித நேயத்துடன்,
பிறர் போற்றும் படி வாழ்வு வாழ வேண்டும்,
வாழையடி வாழையாய் நம்மை யாவரும் வாழ்த்த வேண்டும்!
இப்படி ஓர் வாழ்வை ஓவ்வொருவரும் வாழத்துடித்தால்!
அந்த இறையும் இறங்கி வந்து வேடிக்கைபார்ப்பார்!
வா தோழா வா, நாளை நமதே!

-செல்வா

Friday, 12 October 2018

விசித்திர மனிதர்கள்!

இவ்வளவு சுயநலமாகியதா மனிதவாழ்வு?
இரக்கம் கொண்ட மனிதர்கள் அற்ப சொற்பம் தானா?

இன்றளவில் இரக்கம் குடும்பத்தினர் மத்தியிலே கூட இல்லை என்றாகின!
அக்கறை கொண்ட பால்ய உறவுகள் கூட பணத்தின் பெயரால் பகைத்து நிற்கின்றன!

பகைவன் கூட நம் வளர்ச்சியில் ஆர்வப்படுவார் ஆனால் பக்கத்து வீட்டுகாரரிடம் அதுஇல்லை!
நான் எனது என்ற குறுகிய வட்டத்தில் சுழலும் இயந்திரமாகின மனித வாழ்வு!

ஓடும் ஓட்டத்தில் வழியில் காணும் வித்தைகளில் சற்று இளைப்பாறி இதுதான் வாழ்வாகின!
பொருட்களை சேர்க்கின்ற வேகத்தில் சில மனிதனை கூட சம்பாதிக்க முடியாமல் போகின்றன!

உலகமயமாதலினால் ஒருவன் வைத்திருக்கும் பொருளே அவனது மதிப்பு என்றாகின!
ஒரு வெள்ளத்தில் பொருட்கள் அடித்துச்சென்றால் எல்லோரும் சமமே!

சேர்ப்பதை இதயமாகவும், சேமிப்பை முதலிடாகவும் செய்யின் எதிர்காலம்
இரக்கமான காலமாக தோன்றும்...

நாளும் சிந்திப்போம் நல்மனிதனாக இருப்போம்...

-செல்வா





Wednesday, 10 October 2018

குறையில்லா மனிதன்!

குறையில்லா மனிதன் உண்டா இவ்வுலகில்?
நம் எதிரில் உள்ளவர் குறையில்லாதவரே நமக்கு!
நாம் அடுத்தவர் தட்டையே எப்பொழுதும் நோக்குகிறோம்!
நமது தட்டை நாம் எப்போது பார்க்கின்றோமோ,
அன்றிலிருந்து குறையில்லை, ஏனென்றால் நம்முடையதோ அக்ஷயபாத்திரம்!

எதுவாகினும் அது நம்மிலிருந்து துவங்குகிறது!
நமது எண்ணம் எப்படியோ அதுவே நமது சூழ்நிலை!
நமது சூழ்நிலை எப்படியோ அதுவே நமது செயல்!
நமது செயல் எப்படியோ
அதுவே நமது வெற்றி!

தடைகள் தடையாகவும் இருக்கலாம்!
தடைகள் சவால்களாகவும் பார்க்கலாம்!
தடையாக தோன்றின் சோகyம், தோல்வியாய் முடியும்!
சவாலாக தோன்றின் உற்சாகம், வெற்றியாய் முடியும்!

விழி திறப்பின்,வழி பிறக்கும்! 
விழி திறப்பின்,ஒளி பிறக்கும்! 
வாகை சூடுவோம் மனக்கண் மார்க்கமாக!

-செல்வா

Sunday, 30 September 2018

ஆணிற்கு வேண்டிய மனம்!

களம் புக காத்திருக்கும் தோள்!
கயவர்களை வீழ்த்த இருக்கும் தோள்!
ஒரு போதும் பாரத்தினால் ஓயாத தோள்!
இடுக்கன் தாங்கி நிற்கும் தோள்!

சினம் கொண்டவன் சீரி வந்திடினும்,
பகை கொண்டவன் கடலாய் வந்திடினும்,
தகர்க்க முடியாத பாறை இவன்!
அடக்க முடியாத காளை இவன்!
எதிர்க்க முடியா வீரன் இவன்!
எவன் அவன் தன்னை அறிந்தவன்!

உனது சக்தி நீ அறிந்திருந்தால்!
அது பல்கி பெருக பயின்றிருந்தால்!
எதிரில் பார் வரின் அஞ்ச வேண்டாம்!
உனது பலம் நீ அறிந்திருந்தால்!
எதிரில் புயலே வரினும் அச்சம் வேண்டாம்!

நிலம் தன்னில் கால் ஊன்றி நில்!
மனம் தன்னில் நம்பிக்கையுடன் நில்!
களம் தன்னில் உயரிய யுக்தியுடன் நில்!
முடிவினில் வெற்றியுடன் நில்!

-செல்வா



Thursday, 27 September 2018

பாதியில் முறிந்த பயணம்!

பாதையறியா பயணங்கள் கூட முடிவுறும்!
மனிதன் மாண்பு தவறிய பயணம் பாதியிலே முறியும்!

உணர்வறியா உறவினால் காதல் முறியும்!
மதிப்பறியா மனதினால் உறவு முறியும்!
கேடுகெட்ட மதியினால் நட்பு முறியும்!
சூட்சம புத்தியினால் சுற்றம் முறியும்!

வழியறியா பயணம் பல உண்டு வாழ்வில்!
அதை கடந்து சென்றால் வெற்றி!
தடுக்கி நின்றால் அனுபவம்!
சிலிர்த்து நின்றால் ஆர்வம்!
சோர்ந்து தங்கினால் தோல்வி!
முறிந்து போகும் பயணம் முற்றிடுவதில்லை!

சினம் காத்து, நாவடக்கி திட்பம் சரியாக அமைவின் எப்பயணமும் நில்லா!
அப்படியேனும் நிற்பின் அதற்கான விடை காலத்திடம் உண்டு!
கனியும் காலத்திடம் கணக்கும் உண்டு!

விடை நோக்கி காத்திருப்போம்!

-செல்வா

Sunday, 23 September 2018

காதல் கண்ணே!

இழப்பதற்கு ஒன்றுமில்லை இனி கண்ணே!
என்னை உன்னில் தொலைத்திட்டேன் கண்ணே!

கிரகணம் வந்ததுபோல் மறைந்திட்டாய் கண்ணே!
உன் மனதில் ஒளிந்திருக்க ஆசையே கண்ணே!

இளமை உன்னை கண்டு வியந்தது நிற்கிறது கண்ணே!
முதுமை வரை இணைந்து வாழ்வோம் வா கண்ணே!

பழம் கனிய நாள் பிடிக்கும் என அறிவேன்!
மனம் கனிய நாள் பிடிக்கும் என இன்று அறிவேன்!

உந்தன் நினைவுகளால் அனுதினமும் நோயுற்றவன் ஆகிறேன்!
மழைத்துளி மண்ணை முத்தமிட்டு வளப்படுத்துவதைப்போல், என் காதல் நோயை உன் முத்தத்தால் தீர்தகற்று!

மருத்துவ முத்தத்தால் என் துயர் துடை கண்ணே!
செவிலிய கரத்தால் என் இடர் களை கண்ணே!
உயிரும் உணர்வும் நீ காற்றிரைப்பாய் என காத்திருக்கிறது!
சுவாசம் தா, இருவரும் சுவாசிப்போம்!

-செல்வா


Thursday, 20 September 2018

தமிழ்!

எழுத்துக்களின் அழகிய பிணைப்பே!
மொழியின் உண்மையான உயிர்ப்பே!
சொற்கள் தான் அதன் சொற்கள் தான்!

ஓர் அணுவின்றி எவ்வுயிரும் இயங்கா!
எழுத்தின்றி எச்சொற்களும் பிறவா!
சொல்லின்றி மொழி தனித்து நிற்கா!

மகத்தான தமிழின் சிறப்பே,
கொட்டிக்கிடக்கும் சொற்களே!
எதை தேடினாலும் அதற்கான விடை தமிழினுள்ளே!

இத்தனை சீரிய தமிழை சீர்பட பேசுவோம்!
சிந்தனையில், பேச்சில், எழுத்தில் தமிழ் செய்வோம்!
ஆழமான தமிழை ஆராய்ந்து முத்தெடுக்காவிடினும்!
குளித்து,களித்து இன்புறுவோம்!
நம் தமிழ் கடலில் நீந்திப்பழகுவோம்!

வாழ்க தமிழ்!
வளர்க தமிழர்!
வாழிய செந்தமிழ்நாடு!

-செல்வா

Tuesday, 18 September 2018

சொற்கள்!

சொற்கள் குலைவாய் இருப்பின் அன்பை கூட்டும்!
சொற்கள் நெகிழ்வாய் இருப்பின் மதிப்பை பெருக்கும்!
சொற்கள் கனிவாய் இருப்பின் உள்ளத்தினை சேரும்!
சொற்கள் கடினமாக இருப்பின் உறவை உடைக்கும்!
சொற்கள் கோபமாக இருப்பின் நட்பை சிதைக்கும்!
சொற்கள் சாந்தமாக இருப்பின் அமைதியை தரும்!
சொற்கள் இதமாக இருப்பின் ஆறுதல் தரும்!
சொற்கள் இனிமையாய் இருப்பின் வெற்றி வரும்!
சொற்கள் தமிழாக இருப்பின் தமிழுக்கு அணிசேரும்!

நாளும் உதடு உதிர்க்கும் சொல்லே,
நமது எதிரியையும், நண்பரையும் தேடித்தரும்!
எதற்கும் சல்லடை இல்லை எனில் தொல்லையில்லை!
சொற்களை சல்லடையில் சலித்து பேசுக!
வாய்மொழி சிறப்பின் வையகம் நமதே!

-செல்வா

Saturday, 15 September 2018

நெருக்கடி நிலை!

வாழ்க்கை நெரிசலில் நெருங்கும் பொழுது,
நமக்கானவர்களின் தேடல் மிகஅதிகமாவது இயல்பே!

துணையில்லா கன்றிற்கு துணையாக யார் வருவார்!
இணையில்லா இளைஞர்க்கு இணையாக யார் வருவார்!
இணையும் துணையும் பிறப்பதில்லை மனதில் உடன் இருப்பதே!
நம்பிக்கை என்னும் உறுதுணையே!

சுழலின் மத்தியில் சிக்கியவன் போல் எவ்வளவு எழினும் உதவிக்கு ஓர் கரம் வேண்டும்!
அந்த கரம் நம்பிக்கையாய் எல்லோருக்கும் அமைய வேண்டும் தன்னம்பிக்கையாய்!

தேனீயைவிட நாம் கூடுதலாக முயற்சி செய்ய வேண்டும்!
எறும்பை விட சுறுசுறுப்பாக ஓர் வழி அடைபடின் மற்றோர் வழி தேட வேண்டும்!
காற்றைவிட வேகமாக வீசி நல்ல எண்ணம் மனதில் பரப்ப வேண்டும்!

நதியின் பாய்சல் கடலை நோக்கியே அதுபோல் உனது பாய்ச்சல் இலக்கை நோக்க வேண்டும்
நாம் காணும் இடரான வழியை சீராக்கினால் பயணம் துரிதப்படும்!
விவேகமாய் விரைவாய் பயணிப்போம்,
சீரான வேகம் கொள்வோம் இலக்கு ஒன்றே குறியாகும் தடைகளல்ல!

விழி.எழு.விருட்சமாகுக!

-செல்வா

Wednesday, 12 September 2018

முடியும்!

முடியும் என்பதற்கு உதாரணமாய் இரு!
இயலும் வரை முயன்று கொண்டிரு!
தவழும் குழந்தைக்கு நடை வெற்றி!
துவழும் மானிற்க்கு ஓட்டம் வெற்றி!
பயிலும் வித்தைக்கு போட்டி வெற்றி!

முதல்முறை ஜனித்தோம் இப்புவியில் வெற்றி!
ஒவ்வொரு முறையும் முயன்றோம் இவ்வாழ்விற்கு வெற்றி!
நம் பிறப்பிற்கான பலனே யாரும் நம்மை,
நம்பாத வேளையில் நம்கால்களில் தானே நிற்பதே!
இருக்கும் நாட்களில் உதாரணமாய் வாழ்வோம்!
நம்புவோம் இவ்உலகம் நம்வசம்!
முடியும் என்றால் இன்றும், என்றும் நமதே!

விழி.எழு.விருட்சமாகுக!


-செல்வா

Saturday, 8 September 2018

அன்பின் வழியது!

அன்பின் வழியது யாது எனில்?
அமைதியாய் ஆரவாரமற்றது,
இனியதாய் இதமானது,
இயலாதவருக்கு ஈவது,
வாழும் வாழ்க்கையில் மனிதன் முயலும்,
ஓர் குணமாக இதுஒவ்வொரு நாளும் அமைய வேண்டும்!

காந்தி தன் வாழ்வில் காண்பித்தது,
அன்னை தெரசா வாழ்வாக வாழ்ந்தது,
இன்னும் பலரின் வழியது அன்பு!

அன்னையின் கருணை,
தந்தையின் உழைப்பு,
சகோதரியின் பாசம்,
உற்றாரின் அக்கறை,
நண்பனின் நேசம்,
முகம்தெரியாதவரின் நேயம்,
இதன்வழி அன்பு பாய்கிறது!

அகந்தையைவிட்டால் கண்ணில் தெரியும்!
தற்பெருமை குறைந்தால் காதில் ஒலிக்கும்!
அடுத்தவர் இடத்தில் அமர்ந்தால் மனம் உணரும்! 
இப்புவியின் உயர்ந்த அறம்தனை பயில்வோம்!
நிறைவாய் வாழ்ந்து மகிழ்வாய் இருப்போம்! 

இனிய தமிழ் செல்வா, ஓமன் 

Wednesday, 5 September 2018

வாழ்வின் நிஜங்கள்!

வாழ்வின் நிஜங்கள் அபரிமிதமானவை!
நம் கையில் இல்லா பிறப்பும், இறப்பும்!
இடையில் வாழப்பயிலும் சிறப்பும்!
பயில பயில குறையா படிப்பும்!
பக்குவம் தனை அடையும் குறிப்பும்!
நிகழும் வரை எல்லாம் வாழ்வின் நிஜங்கள்!

தினம் தினம் புதிய பொருளின் மீது வரும் ஈர்ப்பும்!
ஈர்ப்பினை அடைய மனதின் தீராத தவிப்பும்!
தவிப்பின் வழி உந்திய சீரான உழைப்பும்!
அடையா பொருளை அடைய கொதிக்கும் வனப்பும்!
ஒருகாறும் தீராமல் தாவித்தாவி சென்றிடும்
என்பது வாழ்வின் நிஜங்கள்!

இல்லாததின் மேல் தவிக்கும் மனமும்!
இருப்பதை கண்டுகொள்ளாமல் விட்டுவிடும் குணமும்!
இன்றும்,என்றும் மாறாத வாழ்க்கையில் நிஜம்தான்!

இருப்பதில் பெருமை கொள்வோம்!
இருப்பதில் இன்பமிகுவோம்!
நம்வாழ்வு வளப்படும் அதுவே வாழ்வின் நிஜம்!

-செல்வா





Monday, 3 September 2018

இயற்கை காதல்!

கார்மேகமே கடந்து செல்லாதே,
மேகம் உடைத்து பசுமை செய்!

நதி நீரே வேகமாய் பாயாதே,
வரப்புகளில் புகுந்து பாசனம் செய்!

தென்றல் காற்றே வீசிச் செல்லாதே!
பூவின் மகரந்தம் கடத்தி
சேர்க்கை செய்!

அயராத பறவைகளே பறந்து செல்லாதே!
வழிநெடுக எச்சமிட்டு மரம் இடச்செய்!

மண்புழுக்களே சும்மா இருக்காதே,
நிலம் தழைக்கும் உரம் கிடைக்கச்செய்!

செழித்த மரங்களே தூங்கி நிற்காதே,
உன்னில் தஞ்சம் புகுவோர்க்கு இடம் செய்!

மண்ணே மயங்கி இருக்காதே,
உழுபவனின் ஆசைப்படி பயிர் செய்!

ஆசையின் அளவில்லாத பற்றினால், வழிமாறிப்போன மனித இனம்!
மனம் மாறிவிடும் மீண்டும் ஒருமுறை இயற்கையை பார்த்தால்!

-செல்வா



Saturday, 1 September 2018

பத்ம வியூகம்!

பாரதம் படித்தோர் அறிவர் பத்மவியூகம்!
பலம் குன்றினும், படைகுன்றினும்,
வியூகம் சிறப்பாக அமைவின் வெற்றி நமதே!

எல்லா வியூகத்திலும் வல்லவன் பார்த்தான்!
வியூகத்தை உடைப்பதிலும், உட்செல்வதிலும், வெல்வதிலும் வல்லான்!
பக்திக்கும், புத்திக்கும் வெற்றி என கண்ணன் அவன் புறம் நின்றான்!
உடல் நுணுக்கம் மட்டும் போதா, மதி நுணுக்கம் மிக்கவன் வல்லான்!
என ஒவ்வொரு முறையும் நிறுபித்தான் பார்த்தான்!

தாமரை மலர் போல சூழும் வியூகம் தனை!
தனதாக்கி வென்று முடித்தான் பார்த்தான்!
மதியின் வழி சென்று உடல் வாகுடன் போரிட்டான்!
மாற்றான் எவனாகினும் அஞ்சான் ஆனான்!
மதியின் கண் செயல் புரிந்தாகினான்! 
வெற்றி சூளுறை அவனிடம் நணுகியதே! 

-செல்வா


Thursday, 30 August 2018

பெண்மை ஓர் தவம்!

ஓ பெண்ணே எத்தனை சவால் உன் முன்னே!
ஜனிக்கும் முன்பே போராட்டம் உன் முன்னே!

கருவிலிருந்து பெண் சிசுவாய் தப்பினாய்!
கள்ளிப்பால் கயவர்களிடமிருந்து தப்பினாய்!

பள்ளி செல்ல பாலராய் அடைபடாமல் தப்பினாய்!
மங்கையான பின்பு மீண்டும் பண்பினால் கற்க தப்பினாய்!
படித்த பின்பு பணி செல்ல மீண்டும் தடை தாண்டினாய்!

நங்கை உனக்கு எத்தனை தடைகள்!
மங்கை உனக்கு அத்தனையும் படிகள்!

இன்று நீ இல்லாத துறை இல்லை!
சாதிக்க வேண்டிய எல்லைக்கு மறுவரையறை செய்தாய்!
ஏறு முன்னேறு உன் பின் உள்ளவர்களுக்கு வழிசெய்!

இன்றும் நமதே!
நாளையும் நமதே!
முயற்சி நமதெனில்!

விழி.எழு.விருட்சமாகுக!

-செல்வா

Friday, 24 August 2018

ஆர்வம்!

புதுக்கவிஞனும் இல்லை!
புதிய தலைப்புமில்லை!
தேர்ச்சி பெற அவசியமுமில்லை!
காலத்தில் முடிக்கும் கடமையுமில்லை!
கருத்து தெரிவிக்கும் கட்டாயமுமில்லை!

பின் ஏன் இந்த ஆர்வக் கோளாறு என்று எண்ணி எண்ணி வியக்கிறேன்!
படைப்பாளியாக மாறாத காரணமோ!
கவிஞனாக உணராத காரணமோ!

கற்பனை வடித்துவிட்டு,
ஓரம் நின்று ரசித்தால் போதும்! 
சிறந்த கல் சாமியாகும்!
சிதறிய கல் படியாகும்!
பொறுமை கொள் மனமே!

-செல்வா...

Saturday, 18 August 2018

நட்சத்திரம் விழும் இரவு!

துணை தேடி காத்திருந்தேன்!
உன் விழி தேடி காத்திருந்தேன்!
இணையாக நீ இல்லாத பொழுதில்,
காண்பதெல்லாம் மாயமா என்ன?

காண்பதற்கு இதமாய் ஒளிரும் நிலா!
நிலவின் தோழிகள் போல் நட்சத்திரம்!
மௌனமே மையல் கொண்ட  இரவு!
உன் வாசம் வீசிச் செல்லும் தென்றல்!
உன் கைப்பற்ற துடிக்கும் இரு கரங்கள்!
வரவேற்பு எண்ணித்தவிக்கும் மனது!
இவையனைத்தும் சேர்ந்தது நட்சத்திரம் விழும் இரவல்லவா!

தாமதித்து போனால் அவைகள் கூக்குரலிடும்!
மெய் தீண்டி நினைவூட்ட பனி தென்றலாய் வரும்!
பக்குவமாய் எடுத்துக்கூற வண்டுகள் பவனி வரும்!
வா அன்பே வா! வந்திடு வா!

நட்சத்திரம் ஏக்கத்தில் விழுந்துவிடும் முன் வா!
நிலா ஒளி தராமல் கோபம் கொள்ளும் முன் வா!
காற்று சத்தமிட்டு வீசிடும் முன்வா!

இந்த இரவினை இன்னமும் நீட்டுவோம்!
நட்சத்திரம் விழும் இரவில் தாளம் மீட்டுவோம்!
புதிய கீதம் இசைத்து ஒன்றாய் ஒலிப்போம்!
காதல் ஒலிக்கட்டும்! அவள் காதில் ஒலிக்கட்டும்!

-செல்வா

Tuesday, 14 August 2018

சுதந்திரத் திருநாள்!

பலர் வீதியில் இறங்கி வென்றெடுத்த சுதந்திரம்!
வெள்ளை கொள்ளையனை விரட்டி வாங்கிய சுதந்திரம்!
அறவழியில் உலகில் நின்று வென்ற சுதந்திரம்!
சிதறிய தேசத்தை இணைத்து கோர்த்த சுதந்திரம்!
பல மேன் மக்கள் குருதியில் கிட்டிய சுதந்திரம்!

சுதந்திரம் என்ற இன்பத்தில்  திளைக்குது என்தேசம்!
உரிமையை மீட்ட நாளின் பெருமை பேசுது என்தேசம்!
தியாகிகளை நினைத்து மகிழுது என்தேசம்!
மகிழ நிறைய இருப்பினும், களைய நிறைய இருப்பினும்!
இரண்டிற்கும் இடையில் வளருது என்தேசம்!

உலகில் காணகிடைக்காத வேற்றுமைகள்!
அதனுள் சிறந்து விளங்கும் ஒற்றுமைகள்!
இங்கு தவிர எங்கும் காணாது!

எண்ணத்தில் உள்ள வேற்றுமையை ஒழிப்போம்!
வீட்டில் உள்ள சாதிகளை ஒழிப்போம்!
வீதிகளில் உள்ள தீண்டாமையை ஒழிப்போம்!
ஊரில் உள்ள குப்பைகளை ஒழிப்போம்!
நாட்டில் உள்ள தீவிரவாதத்தை ஒழிப்போம்!

அன்று ஒலிக்கும் இந்த சுதந்திரமணி,
கேட்காதவரின் காதை துளைக்கும்!
கரம் சேர்ப்போம், தூய பாரதம் படைப்போம்!

வாழ்க பாரதம்! வாழ்க தமிழ்நாடு!

-செல்வா

Sunday, 12 August 2018

வாழ்க்கை பயணம்! 

வாழ்க்கை பயணம் தொடங்கிய இடத்தில் முடிகிறது சற்று அனுபவங்களுடன்!

வாழ்வில் நாம் நாமாக இருப்போம்,
பிடித்தவர்கள் உடன் பயணிப்பார்கள்,
பிடிக்காதவர்கள் வழியில் இறங்கிவிடுவார்கள்...

இறங்கியவர் இடத்தை இன்னொருவர் நிரப்புவார்,
இல்லையேல் சில நேரம் காலியான இருக்கையுடனே பயணங்கள் தொடரலாம்.
துணைக்கு ஆள் இல்லாத பயணம் எல்லாம் வீண் இல்லை!
பல நேரங்களில் தனியாக நடப்பவர்கள் வெகுதூரம் பயணிக்கிறார்கள்!
தூரம் சிறிதாக தோன்றும் துணை இருப்பின்!

கற்றுக்கொண்டே இருந்தால் வாழ்க்கை எளிதே!
செல்லும் வழி முழுவதும் நோக்கிச்சென்றால் தொல்லையில்லை!
நோக்காவிடின் மேடும், பள்ளமும் புரட்டி புரட்டி போடும்!

காலம் என்னும் கருவியில் நாம் செய்யும் பயணம் பதிவாகிறது!
பதியும் படி வழி நெடுக நடந்தால் அது காலத்திற்கு சன்மானமே!

வேகம் அறிந்து, இளைப்பாறி, களைப்பாறி, பதற்றப்படாமல் பயணிப்போம் வாழ்க்கை பயணம் இனிதே!

-செல்வா 


Wednesday, 8 August 2018

திராவிடச் சூரியன்

ஓயாமல் உழைத்தவர் இதோ ஓய்வு எடுக்கிறார்...

தமிழ் அன்னையின் மடியில் துயில் கொண்ட கலைஞா!
ஓயாது உழைத்த உன் ஓய்வு இதோ அண்ணாவின் பக்கத்தில்!

கடன் வாங்கிய இதயம் அதன் இருப்பிடத்திற்கு சென்றது!
கரகரத்த குரல் இனி எம்காதில் ஒலிக்காதென்பதில் மனம் பதைக்கிறது!

உன் திறமைகளை வார்த்தைகளில் அடைக்க இயலா!
தமிழுக்கு நீர் ஆற்றிய கடமையை ஒருவரும் மறக்க இயலா!

தமிழ் பார் எங்கும் ஒலிக்க செம்மொழியாக்கினாய்!
பலதலைமுறை காண தமிழை கணிணியில் ஏற்றினாய்!
திருவள்ளுவர்க்கு ஒய்யாரமாய் குமரியில் சிலை வடித்தாய்!
தமிழ், தமிழ் என எங்கும் முழங்கி நீர் இந்தி திணிப்பை எதிர்த்தாய்!

கொள்கை முழக்கங்கள்,
காலம் மறவா கடிதங்கள்,
கன்னித்தமிழ் கவிதைகள்,
சுவைமிகு நாடகங்கள்,
உணர்ச்சியான வசனங்கள்,
இவை நீர் காற்றில் கலந்தாலும்,
தமிழ் உள்ளவரை நீளும்!
தமிழ் உள்ளவரை வாழும்!

பகைவரும் உன்னிடம் அரசியல் பயில விரும்புவார்!
பிறமொழியினரும் உன் தமிழ் கேட்க விரும்புவார்!
போராட்டத்தின் மறுபெயரான கலைஞா நீர் துயில் கொள்!

இந்த நாடும், வீடும் தலைவரிழந்த மொட்டைக்காடாய் காட்சி தர,
திராவிடம் தன் ஓயாத பயணத்தை அடுத்ததலைமுறையிடையே பயணிக்கிறது!

சமூகநீதி வாழ்க!

-செல்வா

Sunday, 5 August 2018

நிஜம்!

நிழலும் நிஜம் தான், சூரியன் மேலிருக்கும் வரை!
நினைவுகள் நிஜம் தான், உடலில் உயிர் இருக்கும் வரை!
வாய்ப்புகள் நிஜம் தான், தேடல் உள்ளவரை!
வெற்றி நிஜம் தான், மனதில் உறுதி உள்ள வரை!
வார்த்தை நிஜம் தான், நோக்கம் நல்லதாக உள்ளவரை!
அன்பு நிஜம் தான், இரு மனம் இணைந்து இருக்கும் வரை!
வாழ்வு நிஜம் தான், நாம் மண்ணில் உள்ளவரை!

வாழும் வாழ்வை அன்பினால் ஆள்வோம்!
இணக்கம் கொள்வோம்!இன்புற்றிருப்போம்!

-செல்வா

Wednesday, 1 August 2018

வாலிபம்!

வாலிபம் மரணம் வரை மனிதன் வாழ விரும்பும் பருவமது!
மது தரும் போதையும்,
மதி கெடும் பேதையும் விலக்கி வைத்திருப்பவர்கள் சிலரே!

அவ்வாறு இலரே மாதுவின் மயக்கமாய்! காமத்தில் கலக்கமாயிருப்பர்!

இப்படியுமிலரேல் சூதிர்க்கு அடிமையாய்,
நேரவிரயமாக்கும் வீரராய் வீற்றிருப்பர்!

இம்மூன்றிலிருந்து தப்பியவன்!
வாலறிவன்!
ஐம்புலத்தை அடக்கி ஆள்பவன்!

பாரதி கூறினான் இளமையில் வறுமை கொடியது என்று!
ஆனால் இக்காலம் அதற்கு நேர்மாறானது!

இளமையில் வறுமை ஆகச்சிறந்தது!
வறுமை மது, மாது, சூது இம்மூன்றிலிருந்தும்,
வாலிபனை விலக்கி வைக்கும்!

இம்மூன்றிலிருந்து மீண்டவன்!
இன்னொரு விவேகா ஆவான்!
ஆற்றல் மிகுந்த வாலிபத்தை அடக்கி ஆளும்,
வல்லமை ஒவ்வொரு இளைஞருக்கும் வேண்டும்!

சோம்பித் திரியாமல்!
கற்பவைகளை கற்று!
திறமைகளை வெளிக்கொணர்ந்து!
அறிவான சமுதாயத்திற்கு வித்தாய்!
முளைவிட்டு வேர்பிடித்து!
மரமாய் வளர்ந்து பயன்தருக!

இந்த உலகம் நமக்கு அளித்த வாழ்விற்க்கு!
இரட்டிப்பு பலன்தருக!

விழு! எழு! விருட்சமாகுக!

-செல்வா

Monday, 30 July 2018

முதல் தனிமை!

எனது முதல் தனிமை காதலினால் அல்ல!
எனது முதல் தனிமை வாலிபத்தால் நேர்ந்தது!

பிறந்தது முதல் பார்த்து பார்த்து வளர்க்கப்பட்ட பாலகன்!
கையில் சாப்பிட சிரமப்பட்டு ஊட்டிவிட்டு வளர்ந்தான் பாலகன்!
நாட்கள் ஓடின அதனுடனே படித்தான், வளர்ந்தான்!
பருவம் கொண்டான், கல்லூரியும் முடித்தான்!
வேலை கிடைப்பதோ பட்டிணத்தில் தான், நோக்கினான்!

வாழ்க்கை என்னும் வட்டத்தில் பொருள் தேடி புறப்பட்டான்!
உறவும், தோளும் ஊரிலே வழியனுப்பி நின்றது!
கடனும் கனவும் விடாமல் துரத்தின!
அயலூர் வீதிகளில் அல்லும் பகலுமாய் திரிந்து!
ஐந்தையும் பத்தையும் பார்த்து பார்த்து செலவு செய்து!
எஞ்சியதில் மிஞ்சினால் மாதக்கடைசியில் உணவு உண்டு!
கண்டு கண்டு பயணித்து கன்றுபோல் நடந்து!
வேலை என்னும் சிகரம் நோக்கி குன்றேறினான்!

முதல் முறை கூட்டை விட்டு பறக்கும் பறவைக்கு கூட துணையுண்டு!
ஆனால் வேலை தேடி பட்டிணம் போகும் பிள்ளைக்கு யார் துணை!
காலம் தான் துணை!

பெற்றோர்களே பிள்ளைகளை உங்கள் கண்முன் சிறகடிக்க பழக்கிவிடுங்கள்!
ஒரு முறை விழுந்து பின்பு எழுவதை கற்றுக்கொடுங்கள்!

பருவத்திலும் கைப்பிடித்து நடக்காமல்!
கையில் உணவு ஊட்டாமல்!
தூர நின்று நடக்க கற்றுக்கொடுங்கள்!
தட்டில் எடுத்து போட்டு உண்ணச்சொல்லுங்கள்!
அம்பாரியில் இருந்து இறக்கிவிட்டு!
நடந்து போக கற்றுக்கொடுங்கள்!
அவன் விழுவான் சற்று பொறுங்கள் எழுவான்!

தனிமையே அவனை தனிமனிதனாக தேற்றும்!

-செல்வா

Saturday, 28 July 2018

மழைஇரவு!

அந்திமழை அரங்கேறியது!
அவைநிறைந்த சத்தத்திற்கினையானது!

தொங்கும் இலைகளையும், தங்கும் பறவைகளையும் விழிக்கச்செய்து!
அவைகளின் காதுகளில் கிசுகிசுத்து உடல் நனைத்து உஷ்ணம் தணித்தது!

காதல் கொண்டவர்கள் காதலியை தேட!
உடல் நடுங்கியவர்கள் தேனீர் தேட!
நண்டுகள் சேற்றில் விளையாட!
ஒளிரும் சந்திரனுக்கு மகுடம் போல்,
மிளிர்ந்தது மழை இரவில்!

ஓடும் நீரில் ஓடமிட மனதடிக்குது!
முற்றிலும் நனைய உள்ளம்துடிக்குது!
கையில் உள்ள கைப்பேசி தடுக்குது!
மனம் மீண்டும் மீண்டும் துடிக்குது!
கடக்க முடியா இரவாய் கடக்குது!

மழையின் சத்தத்தில் மற்றவை அடங்கின!
மழையின் குணத்தில் மற்றவை குளிர்ந்தன!

மழை இரவு ஓர் சிறுகுழந்தைபோல்!
சிணுங்கி சிணுங்கி இரவு முழுவதும் ஒலிக்கும்!
ரசிக்காதவரையும் வசியம் செய்யும் தன்மை அதற்குண்டு!

உண்பவர்களுக்கு மழையில் சூடான உணவு!
காதலிப்பவர்களுக்கு மழையில் மூழ்கும் உணர்வு!
குழந்தைகளுக்கு மழையில் விளையாடும் உணர்வு!
விவசாயிக்கு மழையில் பயிர் செழிக்கும் உணர்வு!
உறைந்து கிடக்கும் உணர்வுகள் கிளர்ந்து எழும் இரவு!
இருள் சூடிய இதமான மழை இரவு!

-செல்வா

Wednesday, 25 July 2018

பணம்!

பணம் அளவில்லாமல் இருப்பினும் அழிவே!
பணம் அளவுகுறைவாக இருப்பினும் கழிவே!

அருள் நிறைந்தவன் அளவாக செல்வம் பெற்றவனே!
அளவுடையதாக இருப்பின் ஆடம்பரம் வாரா!
அளவுடையதாக இருப்பின்
தலைக்கனம் வாரா!
தலைக்குமேல் கனம் வர படுகுழியே!

சற்று குறைவாக இருப்பின் நல்குரவு!
வறுமை கடனில் சென்றுவிடுதல் கேடு!

நிறைவும்மில்லாமல் குறைவும்மில்லாமல்
அருள் வேண்டும்!
ஏவர்க்கும் தீங்கில்லா பொருள் வேண்டும்!
எக்காலமும் தடையில்லா அண்ணம் வேண்டும்!
ஒருபோதும் கடனில்லா வாழ்வு என்றும் வேண்டும்!
என்றென்றும் நிம்மதியான தூக்கம் நித்தம் வேண்டும்!
காலத்தால் குறையாத மகிழ்ச்சி வேண்டும்!
அருளும் பொருளும் அறவழியில் பெற்றிடும் வரம் வேண்டும்!

இவை கிட்டினால்! இவ்வுலகில் அவனே ஒப்பற்றவன்!

-செல்வா

அருள் நிறைந்தவன் அளவாக செல்வம் பெற்றவனே!
அளவுடையதாக இருப்பின் ஆடம்பரம் வாரா!
அளவுடையதாக இருப்பின்
தலைக்கனம் வாரா!
தலைக்குமேல் கனம் வர படுகுழியே!

சற்று குறைவாக இருப்பின் நல்குரவு!
வறுமை கடனில் சென்றுவிடுதல் கேடு!

நிறைவும்மில்லாமல் குறைவும்மில்லாமல்
அருள் வேண்டும்!
ஏவர்க்கும் தீங்கில்லா பொருள் வேண்டும்!
எக்காலமும் தடையில்லா அண்ணம் வேண்டும்!
ஒருபோதும் கடனில்லா வாழ்வு என்றும் வேண்டும்!
என்றென்றும் நிம்மதியான தூக்கம் நித்தம் வேண்டும்!
காலத்தால் குறையாத மகிழ்ச்சி வேண்டும்!
அருளும் பொருளும் அறவழியில் பெற்றிடும் வரம் வேண்டும்!

இவை கிட்டினால்!
இவ்வுலகில் அவனே ஒப்பற்றவன்!

-செல்வா

Friday, 20 July 2018

குற்றாலம் அருவி!

மேகத்தில் முகந்து
காராய் பொழிந்து,
மலையெங்கும் வழிந்து,
தவழ்ந்தோடி பாய்ந்து,
அருவியாய் பொழிந்தாய்!

எத்தனை இடர்கடந்து ஓடினாலும்!
மாறவில்லை வேகம்,
காணவில்லை சோகம்,
தாளவில்லை உற்சாகம்!

வெள்ளி ஆடையுடுத்தி,
காலில் சலங்கை கட்டி ,
புகை நிரம்ப சாரல் பெய்து,
சில்லென மேனி கொண்டு,
தாய் போல் குளிர்விக்கிறாய்,
சேய் போல் மகிழ்விக்கிறாய்!
வேகமாய் ஓங்கி  அடிக்கிறாய்!
பொங்கி பாய்ந்து விடுகிறாய்!

சற்றும் சளைக்காமல்
எங்களை பார்க்க வருபவளே உனக்கு என்ன கைமாறு செய்ய போகிறோம்?
என்று எண்ணி எண்ணி வியப்பில் ஆழ்ந்ததடி மனம்!

கொடையான உன்னை காக்க நெகிழி தனை தவிர்ப்போம்!
நீண்ட இயற்கை தனை பேனிப்பாதுகாப்போம்!
காடு, வீடு இரண்டும் ஒன்றாய் பாவித்து அசுத்தம் செய்யோம்!
அமிர்தமாய் நீர் அதனை சேமித்து பயிர் செய்வோம்!
நீரின் மகிமைதனை சிசுவுக்கும் எடுத்துரைப்போம்!
உறுதி பூணுவோம்! இயற்கையை போற்றுவோம்!

வா! வா! வகையானவளே ஓடி வா!

-செல்வா

Wednesday, 18 July 2018

காதல் சிறைக்கைதி!

என்னை திருடும் விழி அழகே!
உன்னருகே உலகம் மறக்குதடி!

தடா சட்டம் இல்லை, குண்டர் சட்டமாய் என்மீது பாய்ந்து சிறை செய்!
உன் மேற்பார்வையில் கைதுசெய்து, வழக்காடி சிறை செய்!

துப்பாக்கி தோட்டாவைப் போல் உன் பார்வை நெஞ்சை துளைக்கு தடி!
மெல்லிய தேகமிது அதை தாக்கி தூள் தூள் ஆக்காதடி!

வார்தைகளை உதிர்த்துவிடு உன் செவ்விதழால்!
மதுரம் சொட்டாதோ! இல்லை பன்னீர் மனக்காதோ!
அதுவுமில்லை எனில் உன் பற்களின் ஒளியால் முத்துக்கள் ஜொலிக்காதோ!
வாய் திறக்காமல் கண்களினால் வார்த்தைகளை கடத்திடு!

உன் பார்வையால் நீராய் இருந்த நான்  கொதித்தெழுந்து ஆவியாகினேன்!
பின்பு அந்த கடைக்கண் பார்வையில் குளிர்ந்து,
சில்லேன்று உன் கையிடையில் அகப்பட்டேன், அகம் குளிர்ந்தேன்!

மயிலே தூரம் நின்றது போதும்!
கூர் பார்வையால் குத்தியது போதும்!
கோலம் செய்! வண்ணக்கோலம் செய்!

உன் விழி நேத்திரத்தில்  சிக்கித்தவிக்கும் சிறை கைதி!!! 

-செல்வா