சிந்தனை அரும்பு!
சொல்ல முடியா துயரத்திற்கு கூட மருந்துண்டு,
ஆனால் தீராத ஆசைக்கில்லை மருந்து இவ்வுலகில்!
காணா கனவு கூட கைகூடும் முயற்சி இருப்பின்!
கிட்ட இருப்பது கூட எட்டாது சோம்பிக்கிடப்பின்!
எழுந்து நின்றால் நடப்பது சுலபமே!
நடக்கப் பழகினால் ஓடுவது
சுலபமே!
ஓட முடிந்தால் இலக்கடைவது அண்மையே!
இலக்கடைந்தால் சான்றோன் ஆவது எளிதே!
நமது எண்ணத்தில் என்ன உள்ளதோ,
அதுவே நமக்கு கின்னத்தில் கிடைக்கும்!
எண்ணம் சிறிது பிசக வாழ்க்கையும் பிசகுமே!
எண்ணத்தில் வண்ணம் சேர்க்க வாழ்வும் ஒளிருமே!
எண்ணங்கள் நன்றாக அரும்பட்டும்!
அலராக விரிந்து இனம் பெருகட்டும்!
முகிழாக கமழ்ந்து வாழ்வு மணக்கட்டும்!
விழி! எழு! விருட்சமாகுக!
-செல்வா
சொல்ல முடியா துயரத்திற்கு கூட மருந்துண்டு,
ஆனால் தீராத ஆசைக்கில்லை மருந்து இவ்வுலகில்!
காணா கனவு கூட கைகூடும் முயற்சி இருப்பின்!
கிட்ட இருப்பது கூட எட்டாது சோம்பிக்கிடப்பின்!
எழுந்து நின்றால் நடப்பது சுலபமே!
நடக்கப் பழகினால் ஓடுவது
சுலபமே!
ஓட முடிந்தால் இலக்கடைவது அண்மையே!
இலக்கடைந்தால் சான்றோன் ஆவது எளிதே!
நமது எண்ணத்தில் என்ன உள்ளதோ,
அதுவே நமக்கு கின்னத்தில் கிடைக்கும்!
எண்ணம் சிறிது பிசக வாழ்க்கையும் பிசகுமே!
எண்ணத்தில் வண்ணம் சேர்க்க வாழ்வும் ஒளிருமே!
எண்ணங்கள் நன்றாக அரும்பட்டும்!
அலராக விரிந்து இனம் பெருகட்டும்!
முகிழாக கமழ்ந்து வாழ்வு மணக்கட்டும்!
விழி! எழு! விருட்சமாகுக!
-செல்வா

No comments:
Post a Comment