செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Tuesday, 24 December 2019

புலரும் காலை!

புலரும் காலை!

புலரும் காலைப்
பனியும் விலகும்

நீர்த்துளியும் ததும்பும்,
பொன்னொளியும் நிரம்பும்!

வைகறை விடியல் வாசம் தேடி,
கங்குல் ஒடியும் சுவாசம் தேடி!

நிலவினை மறையச்சொல்லி,
புதுக் கதிரினை நிரப்பச்சொல்லி!

எனை வாட்டும் குளிர் தனையும்,
அதில் வாடும் உடல் தனையும்,
உயிரூட்டும் பொழுதே
இவ்வழகிய எழில்
காலை பொழுது!

-செல்வா!

No comments:

Post a Comment