செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Thursday, 5 December 2019

இளையராஜாவின் இசை!

இளையராஜாவின் இசை!

இளையராஜா இன்னிசையில் நனைந்தால் குளிர் அடிப்பதில்லை ஏனோ?

திகட்டாத இன்பமா இசை?
சலிக்காத இன்பமா இசை?

வலி போக்கும் மருந்திசையா?
களிப்பாக்கும் விருந்திசையா?

மனதினை மாற்றவும்,
மனமதை தேற்றவும்,
வலிமை இசைக்குண்டு!

இசைப்பார் இசைக்க இறைவனே பள்ளி கொள்ளும் பொழுது!
நான் என்ன அற்ப மனிதன் தானே!

இசை மழையே எனை நனைத்திடுவாயாக!

-செல்வா!

No comments:

Post a Comment