செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Wednesday, 4 December 2019

மனத்தோட்டம்!

மனத்தோட்டம்!

மனதின் தோட்டத்தில்,
மல்லிகை மலரட்டும்,
நறுமணம் கமழட்டும்,
வண்டுகள் சூழட்டும்!
தேனீக்கள் அமரட்டும்!
மனதின் தோட்டத்தை
மகிழ்வின் தோட்டமாக்குக!

விதை விதைத்தால் மட்டும் மரமாகாது!
உரமிட்டு, பாத்தி கட்டி களையெடுத்து காக்க,
இட்டது மல்லிகையெனில் நறுமணம் நாடெங்கும் கமழும்!
கலையெடுத்து காக்காவிடில்
மல்லிகை மணமில்லாததாகிவிடும்!

மனதை பேணும் கடமையை நாளும் செய்வோம்!
உழவனுக்கே விளைச்சலின் மகசூல் கிட்டும்!

-செல்வா!

No comments:

Post a Comment