செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Monday, 18 November 2019

வானமே எல்லை!

வானமே எல்லை!

மெல்ல மெல்ல ஏறுவோம் வானில்,
வட்டமிட்டு பாடுவோம் வானில்,

திட்டமிட்டு ஆடுவோம் வானில்,
வண்ணமிட்டு காட்டுவோம் வானில்,

கண்களில் கனவுகளால் கண்டதை,
எண்களில் எண்ணங்களால் எண்ணுவோம்!

பண்ணுவோம் முடிந்ததை பண்ணுவோம்!
பண்ணுவோம் முடியும் வரை பண்ணுவோம்!

வாழும் வரை வாழ்வதல்ல வாழ்க்கை,
வீழும் வரை விடாமல் வாழ்வதே வாழ்க்கை!

-செல்வா!

No comments:

Post a Comment