செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Thursday, 7 November 2019

குழந்தை!

குழந்தை!

அந்தக் குழந்தை அவ்வளவு அழகானது,
மழலை குணம் அவ்வளவு மகிழ்வானது,

பேச்சு புரிய வேண்டியதில்லை,
குரல் சத்தமுற வர வேண்டியதில்லை,
மழலையின் குணமே மகிழ்வுதான்!

கைகளில் பேசி,
காதுகளில் சிணுங்கி,
வாயினால் முத்தமிட்டு,
முதுகில் அம்பாரி செய்வது,
யாருமிலை மழலையே மகிழ் நன்மழலையே!

-செல்வா!

No comments:

Post a Comment