இந்த நாள் இனிய நாளே!
உலகில் யாதோர் மூலையில்,
நினையாதவை நிகழும் பொழுது,
உலகில் யாதோர் மூலையில்,
முடியாதவை நிகழும் பொழுது,
பூவாய் புலர்ந்த இந்நாள்
இலங்கும் பொன் நாளே!
புவிக்கோர் கதிரவன் உண்டு,
அவன் வந்து சென்று உயிரூட்டம் கொடுப்பதுண்டு!
அங்ஙனமே மனிதனுக்கோர் மனமுண்டு அதில் நல்லெண்ணம் பல முளைப்பதுண்டு!
மனமென்னும் தோட்டத்தை
மாயையில் மயங்காமல் பேணுவோம்!
நல் எண்ணம் தனை விதைத்து,
தீய எண்ணம் தனை அகற்றிடுவோம்!
ஒரு உழவன் போல் மனதினை தேற்றுவித்தால்!
ஐம்புலமும் நலமாகும் நல்லவை சாத்தியமாகும்!
விழி.எழு.விருட்சமாகுக!
-செல்வா!
உலகில் யாதோர் மூலையில்,
நினையாதவை நிகழும் பொழுது,
உலகில் யாதோர் மூலையில்,
முடியாதவை நிகழும் பொழுது,
பூவாய் புலர்ந்த இந்நாள்
இலங்கும் பொன் நாளே!
புவிக்கோர் கதிரவன் உண்டு,
அவன் வந்து சென்று உயிரூட்டம் கொடுப்பதுண்டு!
அங்ஙனமே மனிதனுக்கோர் மனமுண்டு அதில் நல்லெண்ணம் பல முளைப்பதுண்டு!
மனமென்னும் தோட்டத்தை
மாயையில் மயங்காமல் பேணுவோம்!
நல் எண்ணம் தனை விதைத்து,
தீய எண்ணம் தனை அகற்றிடுவோம்!
ஒரு உழவன் போல் மனதினை தேற்றுவித்தால்!
ஐம்புலமும் நலமாகும் நல்லவை சாத்தியமாகும்!
விழி.எழு.விருட்சமாகுக!
-செல்வா!

No comments:
Post a Comment