செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Tuesday, 12 November 2019

விடியலைத்தேடி!

விடியலைத்தேடி!

உறக்கமிலா விடியலில்லை,
உறங்கியவர்கள் எதையும் தவறவிடவில்லை,
நேரத்தை தவிர எதையும் தவறவிடவில்லை!

காலை உறங்கிய நாட்களை எப்படி மீட்பது என,
இரவு முழுவதும் யோசித்தே தூங்கினேன் அவ்வாறு தூங்கி,
மற்றொரு காலையும் விடியாமல் கழித்தேன்!

இனிவரும் நாளிளாவது உறக்கம் உடலுக்கென கொள்வேன்,
விடியலை உள்ளுணர்வுக்கென கொள்வேன்!

இதுவரை கழிந்தது கடனாக போகட்டும் விட்டுவிடு!
இனிவரும் காலமாவது சேமிப்பாக இருக்கட்டும் விழித்தெழு!
ஒரு கை பார்க்கலாம்!

விழி.எழு.விருட்சமாகுக!

-செல்வா!

No comments:

Post a Comment