செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Thursday, 6 December 2018

எளிமை!

எளிமை!

எளிமையை எள்ளி நகைக்கிறார்கள்!
வாழ்வில் செல்வம் உயர ஆடுகிறார்கள்!
ஆடம்பரமே முன்னேற்றம் என்ற மமதை!

எளிமைக்கும் ஆடம்பரத்திற்கும்,
நூல் அளவே வித்தியாசம்!
தேவைக்குச் செய்தால் எளிமை, காண்பிக்கச்செய்தால் ஆடம்பரம்!

வளர்ச்சி எனும் போர்வை ஆடம்பரத்தைக் காக்கிறது!
ஆற,அமர இயங்கும் மனிதனை பறந்து பறந்து ஓடச்செய்கிறது!

எவ்வளவு செல்வம் சேரினும் இன்றளவில் போதுமானதாகவில்லை!
இதைவிட இன்னும் சிறப்பாக வேண்டும் என்று இருப்பதை உணரவில்லை!

ஓர் கடன் வாங்க,
அது சுமையாக மாற,
வண்டிமாடு போல் சுமை,
கடன் சுமை இழுக்கிறார்கள்!
இருப்பதைக் கொண்டு சேமித்து,
வாழ்பவர் நவ உலகின் சாமர்த்தியசாலி!

எல்லாம் சிறப்புற குழந்தைகளுக்கு தர தேவையில்லை!
உங்கள் அன்பை சிறப்புற அளியுங்கள், பொன்னான நேரத்தை அளியுங்கள்!

அன்பான சூழலிலும் அரவணைப்பில் வளரும் குழந்தையே நல்ல குடிமகனாவார்
வீட்டிற்கும் நாட்டிற்கும்!

விழி.எழு.விருட்சமாகுக!

-செல்வா

No comments:

Post a Comment