செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Friday, 28 December 2018

அன்பின் தூரம்!

அன்பின் தூரம்!

அருகில் இல்லாத குறையை கைப்பேசி தீர்த்ததோ!
அன்பான வார்த்தைகளை  அலைக்கற்றை கடத்துதோ!
துடிக்கும் இதயத்தை துல்லியமாக மின்செயலி காட்டுதோ!
தூரம் சிறிதானதே தொலைத்தொடர்பு உள்ளவரை!

இன்றளவில் நெருங்கா இடமுமில்லை அடையா சிகரமுமில்லை!
பெண்ணின் இதயமும் அவளின் எண்ணமும் மட்டுமே விஞ்ஞானிக்கும் விளங்கவில்லை!

விண்கலம் ராகுக்கு சென்றாலும்!
செயற்கைகோள் இருமுறை புவியை சுற்றினாலும்,
இவளின் மகிழ்ச்சியோ ஈர்வார்த்தையிலே அடங்கியிருக்கும்!

தேவை என்பதோ இவளுக்கு சிறியதே,
நாம் தேங்கி நிற்க இவள் மனம் விரும்புதே,
அடங்கா அன்பை அமிழ்தமாய் இமிழுதே!
இதுவே மகிழ்வென மனமும் மயங்குதே!

-செல்வா





No comments:

Post a Comment