செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Monday, 3 December 2018

வாழ்க்கை ஓட்டம்!

வாழ்க்கை ஓட்டம்!

வாழ்க்கை ஒரு தொடர் ஓட்டம்,
அதை ஓடித்தான் பார்ப்போம்,

பல வேளை காலுக்கு நல்ல செருப்பு  கிடைக்கலாம்,
சில வேளை ஓட நல்ல தரை கிடைக்கலாம்,
எது கிடைப்பினும் ஓட்டம் நிற்பதில்லையே!

முள் ஏறினாலும் புல் மீது ஓடினாலும் அனுபவமே,
அதை அனுபவிக்காமல் உணர முடியா காரியமே!

ஒவ்வொருவருக்கும் தனித்தனி பாதைகள் இங்கு!
ஒவ்வொருவருக்கும் தனித்தனி வேகங்கள் இங்கு!
ஆனால் பாதைவழி வரும் இடர்கள் எவர்க்கும் உரியதே!

ஓடும் ஓட்டத்தில் சில காலம் துணைவரலாம்,
ஓடும் பாதையில் சில நேரம் இளைப்பாருமிடம் வரலாம்!

தகும் உடல் மனிதன் கொண்டான்,
தடம் பதித்து பாதையில் ஓடலானான்,
புத்தம் புதிய பாதை எங்கும் பிறந்தது,
ஆக்கபூர்வமான பயன் கைமேல் கிடைத்தது!

உலகம் சுற்றினால் தான் இயங்கும்!
மனிதம் ஓடினால் தான் சிறக்கும்!

இங்கு ஓட்டம் என்பது பந்தயமல்ல,
நேர்த்தியான வாழ்வுக்கான தேடலே...

விழி.எழு.விருட்சமாகுக!

-செல்வா



No comments:

Post a Comment