செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Monday, 31 December 2018

புதுவருடப்பிறப்பு!

புதுவருடப்பிறப்பு!

நிகழ்வது எல்லாம் நொடிகளில் நிகழ்ந்தது!
நிற்காமல் வேகமாய் நிமிடம் சென்றது!
மழை போன்று விரைவில் மணி பாய்ந்தது!
கட கட வென காலங்கள் ஓட்டமாய் கடந்தது!

ஆண்டு இறுதி நாளில் வந்தது, இவ்வாண்டில்...
நினைக்க நிறைய ஆனந்தமான தருணமுண்டு!
களித்து சிரித்து மகிழ்ந்த பல நேரமுண்டு!
பி.எஸ்.எல்.வி சீறிப்பாய்ந்து இலக்கை அடைந்ததும் உண்டு!

இயற்கை பேரிடரின் கோரமுகமும் உண்டு!
போராட்டத்தில் உயிர் மாய்த்த தியாகரும் உண்டு!
பலர் பிடியில் சிக்கித்தவித்த சிறுமிகளுமுண்டு!
பல அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்ததுண்டு!

இன்னமும் எல்லாம் சொல்ல செய்தியாகும்!
இதை கூட சொல்லாவிட்டால் பாவமாகும்!

இந்த வருடம் கற்றுத்தந்ததை நினைவில் கொள்வோம்!
சென்றதை விட்டு மீண்டு வெளியே வருவோம்!
வரும் காலம் இனிதாக நிறைவேற, சரியான இலக்கையமைப்போம்!
வள்ளுவன் போல் அதற்கென திட்டமிடுவோம்!
தமிழ் போல் செழித்து வளர்வோம்!
திங்கள் திங்களாய் கதிரவன் போல் ஒளிர்வோம்!

நம்செயலால் அன்பு பெருகட்டும்!
நம் குணத்தால் அறம் தழைக்கட்டும்!
நம் வாழ்வால் தமிழ் சிறக்கட்டும்!

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

-செல்வா



No comments:

Post a Comment