வேலையில்லா பட்டதாரி!
கனவு துரத்தும் பலரில் நானும் ஒருவன்,
கடனை அடைக்க தவிக்கும் பலரில் ஒருவன்,
அடைக்கலம் புக புகலிடமில்லாத ஒருவன்,
உலக விலைவாசிக்கு தேரமுடியாத ஒருவன்,
என்ன தான் பிரச்சனை இங்கு?
என் தலைக்கேறவில்லை இங்கு!
என்னில் பிரச்சனையா?
இல்லை இச்சமூகத்திலா?
எத்தனை எத்தனையோ துயரம் கடந்து படித்தும்,
அத்தனை கனவும் பலிக்கும் என நினைத்தும்,
வந்திங்கு சேர்ந்தோம் ந(க)ரத்தில் புகுந்தோம்!
நடை நடையாய் முகவரி கொடுத்தாகியது,
பல தடவை நேர்முக தேர்வு நடந்தாகியது,
படித்தது கேட்கவில்லை,
கேட்டது தெரியவில்லை!
சிபாரிசிற்கோ ஆளில்லை!
மேல படிக்கவோ வழியில்லை!
வறுமை விட்ட பாடில்லை!
எதுவும் மாறவில்லை மாறும் என்ற நம்பிக்கையை தவிர!
வித விதமாக மின்னொளி மிளிரும் நகரில்,
என்றாவது மிளிரும் நல்குவோர் வாழ்வும் அதன் நலமும்!
-செல்வா
கனவு துரத்தும் பலரில் நானும் ஒருவன்,
கடனை அடைக்க தவிக்கும் பலரில் ஒருவன்,
அடைக்கலம் புக புகலிடமில்லாத ஒருவன்,
உலக விலைவாசிக்கு தேரமுடியாத ஒருவன்,
என்ன தான் பிரச்சனை இங்கு?
என் தலைக்கேறவில்லை இங்கு!
என்னில் பிரச்சனையா?
இல்லை இச்சமூகத்திலா?
எத்தனை எத்தனையோ துயரம் கடந்து படித்தும்,
அத்தனை கனவும் பலிக்கும் என நினைத்தும்,
வந்திங்கு சேர்ந்தோம் ந(க)ரத்தில் புகுந்தோம்!
நடை நடையாய் முகவரி கொடுத்தாகியது,
பல தடவை நேர்முக தேர்வு நடந்தாகியது,
படித்தது கேட்கவில்லை,
கேட்டது தெரியவில்லை!
சிபாரிசிற்கோ ஆளில்லை!
மேல படிக்கவோ வழியில்லை!
வறுமை விட்ட பாடில்லை!
எதுவும் மாறவில்லை மாறும் என்ற நம்பிக்கையை தவிர!
வித விதமாக மின்னொளி மிளிரும் நகரில்,
என்றாவது மிளிரும் நல்குவோர் வாழ்வும் அதன் நலமும்!
-செல்வா

No comments:
Post a Comment