செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Friday, 21 December 2018

வண்ணம்!

வண்ணம்!

வண்ணம் என்பது வெளியில் இல்லை!
வண்ணம் என்பது நமது பார்வையில் உள்ளது!

ஒரு விரல் போதும் சூரியனை மறைக்க!
ஓர் கூரிய பார்வை போதும் இரையை பிடிக்க!
இரண்டும் பார்வையே வேற்றுமை அதிகமே!

விரல் நகட்டி கண்ணை சற்று குவித்து நோக்குக!
நோக்க ஓராயிரம் பாக்கியம் ஈராயிரம்!

ஓட கால்களுண்டு, உறங்க இடமுண்டு!
கதைக்க உறவுண்டு,
விளையாட கைப்பேசி உண்டு!
கேட்க நல்ல செவி உண்டு,
ஐம்புலம் சீரிய இயக்கமுண்டு,
எத்தனை கொண்டாட்டமிங்கே!
எத்தனை மகிழ்வு இங்கே!

இதனை மட்டுமே பார்ப்போம்!
மற்றவை புறம் தள்ளுவோம்!

மகிழ். திகழ். புகழ்

-செல்வா

No comments:

Post a Comment