செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Sunday, 9 December 2018

தந்தை, தாய் பேண்!

தந்தை, தாய் பேண்! 

பாதையறியா பால்யத்தில் பயமில்லை!
பாதைமாறி செல்லினும் ஐயமில்லை!

பருவம் தொட்ட பின்னும் பயமில்லை!
பரந்த உலகமாயினும் தொலைவில்லை!

கல்வி முடிந்த பின்னும் பயமில்லை!
தொழில் மாறி போகினும் ஐயமில்லை!

கணவனான பொழுது சற்று தொற்றியது!
தந்தையான பின்பு முற்றும் பற்றியது!

இத்தனை நாள் இல்லாத ஒழுக்கத்தை,
தந்தை என்ற ஓர் உறவு தருகிறதே!
போதையாய் பேதையாய் இருந்த மனம்,
தன்னிலை கண்டு நிலைகொண்டதே!

கார் இருள் படாமல் நம்வாழ்வு மிளிரவும்,
பிற ஒளி பட்டு குன்றாமல் வாழ்வில் திகழவும்,
நாற்கரம் மல்லவா நம்மை காத்தது,
ஈர் உயிர்களல்லவா தவம் செய்தது,
இதை மறப்பின் ஏதும் கிட்டிலன் வாழ்வில்!

மனிதன் தாய், தந்தையின் அருமை உணர எடுக்கும் காலம் அதிகமே!
சுருங்கிய குடும்பத்தில் இன்னமும் சுருக்கம் வேண்டாமே!

வளர்த்த கடனை அன்பினாலே திருப்பியளிப்போம்!
எவ்வளவு கொடுப்பினும் ஈடுகட்ட இயலா நன்கொடை அது!

அன்பினால் சூழுவோம் பண்பினால் பரிசளிப்போம்!
இந்த நிமிடம் முதல் துவங்குவோம்!

-செல்வா


No comments:

Post a Comment