சோலை!
வாழ்க்கை சில நேரம்
வறண்டு போகலாம்
ஏன் பாலையானது என
சிந்தித்து வீணாக்காமல்
ஒரு விதையை ஊன்றி
நீர் விட ஆரம்பிப்போம்
நீர் துளி மண்ணில் விழ
புதிய தளிர் முளைக்கும்
பூ பூக்கும் காய் காய்க்கும்
பறவை வந்து வாழ்ந்திட
ஒன்று பலவாகி பெருகும்
பாலை ஓர்நாள் சோலையாகும்
நாம் நட்ட விதையாலே
நாம் விட்ட நீர்துளியாலே
சோர்ந்திருந்து என்ன பயன்?
விழித்திடு! எழுந்திடு! நாளை நமதே!
நம் முயற்சி வானளவு இருக்கட்டும்
நம் வெற்றி கடலாய் பரவட்டும்!

No comments:
Post a Comment