மழைஇரவு!
அந்திமழை அரங்கேறியது!
அவைநிறைந்த சத்தத்திற்கினையானது!
தொங்கும் இலைகளையும், தங்கும் பறவைகளையும் விழிக்கச்செய்து!
அவைகளின் காதுகளில் கிசுகிசுத்து உடல் நனைத்து உஷ்ணம் தணித்தது!
காதல் கொண்டவர்கள் காதலியை தேட!
உடல் நடுங்கியவர்கள் தேனீர் தேட!
நண்டுகள் சேற்றில் விளையாட!
ஒளிரும் சந்திரனுக்கு மகுடம் போல்,
மிளிர்ந்தது மழை இரவில்!
ஓடும் நீரில் ஓடமிட மனதடிக்குது!
முற்றிலும் நனைய உள்ளம்துடிக்குது!
கையில் உள்ள கைப்பேசி தடுக்குது!
மனம் மீண்டும் மீண்டும் துடிக்குது!
கடக்க முடியா இரவாய் கடக்குது!
மழையின் சத்தத்தில் மற்றவை அடங்கின!
மழையின் குணத்தில் மற்றவை குளிர்ந்தன!
மழை இரவு ஓர் சிறுகுழந்தைபோல்!
சிணுங்கி சிணுங்கி இரவு முழுவதும் ஒலிக்கும்!
ரசிக்காதவரையும் வசியம் செய்யும் தன்மை அதற்குண்டு!
உண்பவர்களுக்கு மழையில் சூடான உணவு!
காதலிப்பவர்களுக்கு மழையில் மூழ்கும் உணர்வு!
குழந்தைகளுக்கு மழையில் விளையாடும் உணர்வு!
விவசாயிக்கு மழையில் பயிர் செழிக்கும் உணர்வு!
உறைந்து கிடக்கும் உணர்வுகள் கிளர்ந்து எழும் இரவு!
இருள் சூடிய இதமான மழை இரவு!
-செல்வா
அந்திமழை அரங்கேறியது!
அவைநிறைந்த சத்தத்திற்கினையானது!
தொங்கும் இலைகளையும், தங்கும் பறவைகளையும் விழிக்கச்செய்து!
அவைகளின் காதுகளில் கிசுகிசுத்து உடல் நனைத்து உஷ்ணம் தணித்தது!
காதல் கொண்டவர்கள் காதலியை தேட!
உடல் நடுங்கியவர்கள் தேனீர் தேட!
நண்டுகள் சேற்றில் விளையாட!
ஒளிரும் சந்திரனுக்கு மகுடம் போல்,
மிளிர்ந்தது மழை இரவில்!
ஓடும் நீரில் ஓடமிட மனதடிக்குது!
முற்றிலும் நனைய உள்ளம்துடிக்குது!
கையில் உள்ள கைப்பேசி தடுக்குது!
மனம் மீண்டும் மீண்டும் துடிக்குது!
கடக்க முடியா இரவாய் கடக்குது!
மழையின் சத்தத்தில் மற்றவை அடங்கின!
மழையின் குணத்தில் மற்றவை குளிர்ந்தன!
மழை இரவு ஓர் சிறுகுழந்தைபோல்!
சிணுங்கி சிணுங்கி இரவு முழுவதும் ஒலிக்கும்!
ரசிக்காதவரையும் வசியம் செய்யும் தன்மை அதற்குண்டு!
உண்பவர்களுக்கு மழையில் சூடான உணவு!
காதலிப்பவர்களுக்கு மழையில் மூழ்கும் உணர்வு!
குழந்தைகளுக்கு மழையில் விளையாடும் உணர்வு!
விவசாயிக்கு மழையில் பயிர் செழிக்கும் உணர்வு!
உறைந்து கிடக்கும் உணர்வுகள் கிளர்ந்து எழும் இரவு!
இருள் சூடிய இதமான மழை இரவு!
-செல்வா

No comments:
Post a Comment