செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Friday, 20 July 2018

அருவி!

குற்றாலம் அருவி!

மேகத்தில் முகந்து
காராய் பொழிந்து,
மலையெங்கும் வழிந்து,
தவழ்ந்தோடி பாய்ந்து,
அருவியாய் பொழிந்தாய்!

எத்தனை இடர்கடந்து ஓடினாலும்!
மாறவில்லை வேகம்,
காணவில்லை சோகம்,
தாளவில்லை உற்சாகம்!

வெள்ளி ஆடையுடுத்தி,
காலில் சலங்கை கட்டி ,
புகை நிரம்ப சாரல் பெய்து,
சில்லென மேனி கொண்டு,
தாய் போல் குளிர்விக்கிறாய்,
சேய் போல் மகிழ்விக்கிறாய்!
வேகமாய் ஓங்கி  அடிக்கிறாய்!
பொங்கி பாய்ந்து விடுகிறாய்!

சற்றும் சளைக்காமல்
எங்களை பார்க்க வருபவளே உனக்கு என்ன கைமாறு செய்ய போகிறோம்?
என்று எண்ணி எண்ணி வியப்பில் ஆழ்ந்ததடி மனம்!

கொடையான உன்னை காக்க நெகிழி தனை தவிர்ப்போம்!
நீண்ட இயற்கை தனை பேனிப்பாதுகாப்போம்!
காடு, வீடு இரண்டும் ஒன்றாய் பாவித்து அசுத்தம் செய்யோம்!
அமிர்தமாய் நீர் அதனை சேமித்து பயிர் செய்வோம்!
நீரின் மகிமைதனை சிசுவுக்கும் எடுத்துரைப்போம்!
உறுதி பூணுவோம்! இயற்கையை போற்றுவோம்!

வா! வா! வகையானவளே ஓடி வா!

-செல்வா

No comments:

Post a Comment