செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Friday, 6 July 2018

விடலைப்பருவம்!

விடலைப்பருவம்!!!

விடலைப்பருவம் வினோத மாற்றம் நிகழும் பருவம்!
ஆண், பெண் என்ற பாலின வேறுபாடில்லை அதற்கு!

இருவருக்கும் ஏற்படும் மாற்றம் உடலளவில்,
உள்ளத்தளவில், யூகிக்கமுடியாதது!
உறுப்புகள் எல்லாம் விளைபடும் காலம்!
உள்ளம் விடைதெரியாமல் தவிக்கும் காலம்!
இனம் புரியாத உணர்வுகளால் பரிதவிக்கும் காலம்!
பருவத்தை பற்றி பேச முடியாமல்,
பெற்றவரும், மக்களும் பேசிடா காலம்!

இது ஒவ்வொருவரும் கடக்க வேண்டிய காலமே!
காதல் மாற்றங்களும், பாலின ஈர்ப்புகளும் தலைதூக்கும் நேரம்!
பருவத்தில் தெரியாத, ரகம் புரியாத,
விசயத்தின் மீது ஏற்பட்ட ஆர்வங்கள் அதிசயமானவை!

பருவமோ கயிற்றின் மீது நடக்கும் காலம்,
ஆர்வத்தில் விழுந்தாலும், அறியாமல் விழுந்தாலும் படுகுழியே!


அவசரப்படாமல், ஆர்வப்படாமல் இயல்பாய் கடத்துக நாட்களை!
முடிந்தவரை நம்பிக்கைக்கு உரியவர்களிடம் மனம் விட்டு பேசி!
தடுமாறாமல், தடம் பதித்து, காதலினால், காமத்தினால்,
போதை பொருட்களினால் கெட்டு போய்விடாமல் தள்ளியிருங்கள்!

நாம் இருக்கும் காலமோ தொழில் நுட்பக் காலம்! 

உங்கள் மேல் வைத்த நம்பிக்கை என்றும் மிளிரட்டும் வைரம் போல்!

பருவம் பதட்டப்படாமல் கடக்க வேண்டிய சாலை!
விழிப்புடன் பயணிப்போம்! வழிகாட்டுவோம்!

-செல்வா



No comments:

Post a Comment