செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Wednesday, 18 July 2018

காதல் சிறைக்கைதி!

காதல் சிறைக்கைதி!

என்னை திருடும் விழி அழகே!
உன்னருகே உலகம் மறக்குதடி!

தடா சட்டம் இல்லை, குண்டர் சட்டமாய் என்மீது பாய்ந்து சிறை செய்!
உன் மேற்பார்வையில் கைதுசெய்து, வழக்காடி சிறை செய்!

துப்பாக்கி தோட்டாவைப் போல் உன் பார்வை நெஞ்சை துளைக்கு தடி!
மெல்லிய தேகமிது அதை தாக்கி தூள் தூள் ஆக்காதடி!

வார்தைகளை உதிர்த்துவிடு உன் செவ்விதழால்!
மதுரம் சொட்டாதோ! இல்லை பன்னீர் மனக்காதோ!
அதுவுமில்லை எனில் உன் பற்களின் ஒளியால் முத்துக்கள் ஜொலிக்காதோ!
வாய் திறக்காமல் கண்களினால் வார்த்தைகளை கடத்திடு!

உன் பார்வையால் நீராய் இருந்த நான்  கொதித்தெழுந்து ஆவியாகினேன்!
பின்பு அந்த கடைக்கண் பார்வையில் குளிர்ந்து,
சில்லேன்று உன் கையிடையில் அகப்பட்டேன், அகம் குளிர்ந்தேன்!

மயிலே தூரம் நின்றது போதும்!
கூர் பார்வையால் குத்தியது போதும்!
கோலம் செய்! வண்ணக்கோலம் செய்!

உன் விழி நேத்திரத்தில்  சிக்கித்தவிக்கும் சிறை கைதி!!! 

-செல்வா

No comments:

Post a Comment