செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Sunday, 8 July 2018

தனித்துவம்!

தனித்துவம்!

இயல்பாய் இருப்பதும் விசித்திரம்!
இயல்பாய் நடப்பதும் விசித்திரம்!
தனித்துவம் இழப்பதே, ஓடும் காலத்தின் விசித்திரம்!

நம் நல்எண்ணங்களை மழுங்கடித்து!
நம் சிறப்புகளை அபகரித்து!
நம் வளங்களை சுவிகரித்து!
நம் அடையாளம் அழிக்கப்பட்டால்,
கூட்டத்தில் ஒருவரே நாம்!

அதற்கே இவ்வுலகமும், ஆதாயக்காரர்களும் துடிக்கிறார்கள்!
தன் பலமும், தனித்துவமும் விட்டுக்கொடுக்காத மனிதன்!
ஓர்இளவரசனாக இருக்கிறான்!
இளவரசனை இரவல் காரனாக,
மாற்றத்துடிக்கிறது இவ்வுலகம்!

இனம் கண்டுகொள்,
உன் பாதையில் நீ செழித்து வளர்க!
முடிந்தவரை கரம் கொடுத்து உதவுக!

நமது தனித்துவம் அடம்பிடிப்பது என்றால்,
நினைப்பது கிடைக்கும் வரை தீரா உழைப்பு வேண்டும்!

நமது தனித்துவம் ஓவியம் வரைவதென்றால்,
மனதில் நீங்காத கற்பனை உணர்வு வேண்டும்!

தனித்துவம் பிரிந்து நிற்பதற்கில்லை,
சிறந்து விளங்குவதற்கு! 

 
நவரத்தினத்தில் ஓர் வைரம் போல்!
ஒன்பதையும் சேர்த்து பார்ப்பின் வைரமும் ரத்தினமே,
ஆனால் தனித்து பார்பின் அதன் மதிப்பும் விலையும் அதிகம்!

அதுவே! தனித்துவம்!

முயற்சி இல்லா வித்து உரமாகும்!
முயற்சியுடைய வித்தோ மரமாகும்!


மரமா? உரமா?

விழி! எழு! விருட்சமாகு!

-செல்வா



No comments:

Post a Comment