செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Wednesday, 4 July 2018

பள்ளி!

 பள்ளி!

கெஞ்சிப்பேசி!
அழுது அடம்பிடித்து!
போக நினைக்காத இடம் பள்ளி!

நாள் போன போக்கிலும்!
கால் போன போக்கிலும்!
போக நினைக்காத இடம் பள்ளி!

முட்புதர்களும், வாய்க்கால்களும்,

தந்திடாத பரிட்சயம் தான் அந்த பள்ளி!

ஆரம்ப காலங்களில் எனக்கு பள்ளி பிடித்ததை விட,
பள்ளிக்கே என்னை மிக பிடித்தது போலும்!
ஒருபோதும் என்னை விட்டு விடவில்லை!

பின்பு வயிற்றிற்காக பள்ளிபோய்,பசி நீங்கிப்போய்!
அந்நாளில் பள்ளி ஒரு வேளை சோற்றிற்காய் ஆனது!

வித்து வளர்கையில் வியந்தேன் ,பள்ளி அறிவியல் என்றது!
மிட்டாய் வாங்க காசு எண்ணினேன், பள்ளி கணிதம் என்றது!
கட்டபொம்மன் கதை கேட்டேன், பள்ளி வரலாறு என்றது!
குமரியில் வள்ளுவர் சிலை பார்த்து பிரம்மித்தேன், பள்ளி அமுது தமிழ் என்றது!

இத்தனை வியப்புகளை பள்ளி சொல்லித்தருமா?
ஆச்சரியமுற்றேன்! ஆர்வம் பிறந்தது,சரணடைந்தேன்!
ஆம் அன்றிலிருந்து இன்றுவரை எனக்கு மிகவும் பிடித்த இடம் பள்ளி ஆனது!

பள்ளி பல மேதைகளை உருவாக்கி!
கற்சிலை போல் அறிவில் மெருகேற்றி!
மிளிர்ந்த அறிவால் மானுட வாழ்வை எளிதாக்கி!
இன்னும் பல அரியவை நிகழ்த்த துணைபுரிவது பள்ளியே!


பள்ளி சென்ற காலம் மறக்க இயலாதது!!!

-செல்வா



No comments:

Post a Comment