செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Saturday, 14 July 2018

குடிமகன்!

குடிமகன்!

குடிமகன் என்பதை தவறாக புரிந்து கொண்டு,
குடித்துவிட்டு திரிகிறார்கள் பல மகன்கள்!

குப்பை தொட்டிக்கு பூட்டு போட வேண்டும்,
இல்லையெனில் குப்பை இருக்கும் தொட்டி இருக்காது!

பொது சொத்து என்றால்,உரிமையுடன் உறங்கிவிடுகிறான்,
இல்லையெனில் திருடிவிடுகிறான்!

பார்க்க அழகு என்றால்,ஒன்று அபகரிக்கிறான்,
இல்லையெனில் ஆக்கிரமித்து விடுகிறான்!

அரசியல் என்றால் சாக்கடை என்கிறான்,
காசுக்கு ஓட்டை விற்றுவிடுகிறான் இல்லையெனில்,
காணி பிரயோஜனம் இல்லை என கதைக்கிறான்!

விளையாட்டு என்றால் கிரிக்கெட் என்கிறான்,
மற்றவையெல்லாம் யாருக்கு வேண்டும் என்கிறான்!

நடிப்பை பார்த்து நடிகனுக்கு ரசிகன் என்கிறான்,
கடவுளுக்கு நிகர் பாவித்து, அபிஷேகம் செய்கிறான்!
இல்லை எனில் கட்சி ஆரம்பித்து தலைவனாக்கிவிடுகிறான்!

இவர்கள் எல்லாம் மீண்டும் பள்ளி சென்றால் பள்ளி தாங்குமோ?
பள்ளிகளின் அகராதிகளை மாற்றிவிடுவார்கள்!

கற்ற கல்வியாலும், பெற்ற அறிவாலும்!
முதலில் உழைப்பால் வீட்டிற்குச்செய்!
அதன்பின் மிஞ்சினால் நாட்டிற்குச் செய்!
ஏனெனில் வீடு அறவழியில் உயரின் நாடும் உயரும்!

வாழ்க தமிழ்நாடு! வாழ்க பாரதம்!

-செல்வா


No comments:

Post a Comment