செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Monday, 16 July 2018

மாற்றம்!

மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை,
ஒவ்வொரு மாற்றமும் தீர்க்கமாக சொல்லுகின்றன!

குழந்தையில் மழலை மொழியாய் மாறின!
பள்ளி சென்றதில் கிறுக்கல்கள் எழுத்தாய் மாறின!
ஓடித்திரிந்ததில் நாட்கள் வேகமாய் மாறின!
சற்று வளர்ந்ததில் எல்லாமும் கண்ணெதிரே மாறின!

வளர்ச்சியடைந்தேன் தேகம் மாறின!
பருவமடைந்தேன் தோற்றம் மாறின!
படித்து பகுத்தேன் அறியாதவை மாறின!
காதல் கொண்டேன் பார்வை மாறின!
பணியில் அமர்ந்தேன்  வருமானம் மாறின!
உறவுகள் கண்டேன் பொறுப்புகள் மாறின!

காலம் மாற, மாற! ஆண்டுகள் ஏற ஏற!
எல்லாமே மாறிக்கொண்டே செல்கின்றன!

மாற்றம் தொடர்வதால் பூமியும் இடைவிடாமல் சுழல்கிறது போலும்!
இரவு,பகலாய் பருவ காலங்களாய் மாறி மாறி துரத்துகிறது!
ஓட்டம் நின்றபாடில்லை!

பூமிக்கே இந்த நிலை எனில்,
நமக்கு என்ன விதி விலக்கா?

மாற்றத்தில் பங்கு கொள்வோம்!
மாற்றம் நல்லன விளைவிக்கும்!
நம்புவோம்! நம்நிலை உயர மாற்றம் வழிபயக்கும்!

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் இன்றும் என்றும் !

-செல்வா











No comments:

Post a Comment