செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Thursday, 3 January 2019

புத்தாண்டு 2019!

புத்தாண்டு 2019!

மழை தரும் மேகங்களே வாருங்கள் புது வருடம் வந்தது!
தேன் சுரக்கும் பூக்களே மலருங்கள் புது வருடம் வந்தது!

அலுவலகத்தில் ஆண்டு இலக்கு இருப்பது போல்,
உங்களுக்கு ஆண்டு இலக்குகள் இல்லையோ!

சென்ற வருடம் பெய்யாத மழையே இந்த வருடம் இதமாக பெய்க!
கடந்த ஆண்டு முகம் மாற்றிய இயற்கையே இவ்வாண்டு காப்பாயாக!

கரை புரண்டு ஓடும் காவிரி வேண்டும்!
நாலு  போகம் விளையும் மண் வேண்டும்!
தமிழ் மணம் வீடெங்கும் கமழ வேண்டும்!

இளைய தலைமுறைக்கு நல்ல வேலை வேண்டும்!
நாட்டை ஆள தகுதியான கோமான் வேண்டும்!

விண்ணும் மண்ணும் மக்கள் மகிழ்ச்சியில் முழங்கிட வேண்டும்!
இந்தாண்டில் இத்தனையும் நிகழ்ந்தேற வேண்டும்!

வேளாண்மை வளர வையகம் தழைக்கட்டும்!
வாழும் நாளில் சொர்க்கமாக இவ்வாண்டு மலரட்டும்!
நாடெங்கும் குறையில்லாமல் மக்கள் மனம் நிறையட்டும்!

-செல்வா


No comments:

Post a Comment