செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Monday, 28 January 2019

மகளுக்கு ஒரு மடல்!

மகளுக்கு ஒரு மடல்!

மகளை பெற்றதினால் பாக்கியமுற்றேன்,
தாயை தூக்கி தாலாட்டும் பாக்கியம் பெற்றேன்,

தங்கை, அக்கா கோராத அளவில் உரிமை கோருகிறாயே,
தாய், தாரமிடம் இல்லாத அளவில் அதிகாரம் செய்கிறாயே,
எளிதில் கோபிக்கும் எந்தன் சுபாவத்தை தகர்த்தெறிந்தாயே!
வடிவமில்லாமல் இருந்த என் வாழ்விற்கு வடிவை தந்தாயே!

உன்னை பெற்றதால் எந்தன் வாழ்வு பூர்த்தியுற்றதோ?
உன்னை ஆரத்தழுவியதால் பாவம் அற்று தீர்ந்தனவோ?

அப்பா என்ற ஒரு வார்த்தையில் கட்டிப்போடும் மரகதமே,
மணாளன் வீடு புகும் மங்கையே, கணவனிடம் தந்தையை தேடாதே!
உன் வாழ்வு சிறக்கட்டும் வீடு தழைக்கட்டும்!

-செல்வா

No comments:

Post a Comment