மென்மை!
மென்மை என்பது பூவின் இதழ் என்றிருந்தேன்
உதவும் நல்ல கரம் பார்க்கும் வரை!
மென்மை என்பது இனிய இசை என்றிருந்தேன்
ஆறுதல் தரும் கனிந்த குரல் கேட்கும் வரை!
மென்மை என்பது அவள் அன்பு என்றிருந்தேன்
அன்னை தெரசாவின் மனிதம் காணாத வரை!
மென்மை என்பது உத்வேகத்தின் எதிரி என்றிருந்தேன்
அன்னல் காந்தியின் போராட்டம் படிக்காத வரை!
மென்மை என்பது பனி படர்ந்த இலை என்றிருந்தேன்
ஒரு குழந்தையின் கைவிரல் எதர்ச்சையாய் தீண்டும் வரை!
மென்மை வெற்றியின் எதிரியில்லை,
மென்மை காற்றில் கரைந்து விடுவதுமில்லை,
அவசர உலகக் காரர்கள் காண்பதுமில்லை,
மென்மையை போற்றுவதுமில்லை!
வன்மை அத்தனையிலும் ஒழிந்து மென்மை பூக்கட்டும் இவ்வுலகில்
பேசித்தீர்க்க வழிஇருக்க சண்டை எதற்கு?
-செல்வா
மென்மை என்பது பூவின் இதழ் என்றிருந்தேன்
உதவும் நல்ல கரம் பார்க்கும் வரை!
மென்மை என்பது இனிய இசை என்றிருந்தேன்
ஆறுதல் தரும் கனிந்த குரல் கேட்கும் வரை!
மென்மை என்பது அவள் அன்பு என்றிருந்தேன்
அன்னை தெரசாவின் மனிதம் காணாத வரை!
மென்மை என்பது உத்வேகத்தின் எதிரி என்றிருந்தேன்
அன்னல் காந்தியின் போராட்டம் படிக்காத வரை!
மென்மை என்பது பனி படர்ந்த இலை என்றிருந்தேன்
ஒரு குழந்தையின் கைவிரல் எதர்ச்சையாய் தீண்டும் வரை!
மென்மை வெற்றியின் எதிரியில்லை,
மென்மை காற்றில் கரைந்து விடுவதுமில்லை,
அவசர உலகக் காரர்கள் காண்பதுமில்லை,
மென்மையை போற்றுவதுமில்லை!
வன்மை அத்தனையிலும் ஒழிந்து மென்மை பூக்கட்டும் இவ்வுலகில்
பேசித்தீர்க்க வழிஇருக்க சண்டை எதற்கு?
-செல்வா

No comments:
Post a Comment