செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Monday, 14 January 2019

பொங்கலோ பொங்கல்!

பொங்கலோ பொங்கல்!

தை திருநாள் தமிழர் பண்பாட்டு பெருநாள்,
நாடு செழித்து மகிழும் திருநாள்!
இனிப்பாய் தித்திக்கும் நனிநாள்!

பழையது கழிந்தது,
புதியது மலர்ந்தது,
நல்ஆண்டு பிறந்தது,
தமிழில் தை பிறந்தது,

இடர்கள் ஓடட்டும்,
இன்னல் தீரட்டும்,

வீடு சிறக்கட்டும்,
நாடும் வளரட்டும்,
காடு செழிக்கட்டும்,
கால்நடை வாழட்டும்,
இன்பம் பொங்கட்டும்,
நல்லவை தொடரட்டும்,
நல்லவர்கள் பெருகட்டும்,
தொழில்கள் முன்னேறட்டும்,
பண்பாடு தழைத்து ஓங்கட்டும்,
தமிழ் எத்திசையும் முழங்கட்டும்,

இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

🌞🌾🌱🌴🌲🌳✨

-செல்வா



No comments:

Post a Comment