செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Saturday, 16 November 2019

தேவை!

தேவை!

தேவை கண்டுபிடிப்புகளின் தாய்,
மனிதஇன வளர்ச்சிக்கு அச்சாணி,

உணவுத்தேவை வேளாண்மைக்கு வித்திட்டது,
உறைவிடத்தேவை கற்காலத்திற்கு வித்திட்டது,
உடைத்தேவை தொழிற்கருவிகளுக்கு வித்திட்டது,

தேவை ஒன்று இல்லையேல்,
மனிதன் தூங்கியே கழித்திருப்பான்,
தேவை ஒன்று இல்லையேல் மனிதன் தேங்கியே கிடந்திருப்பான்!

இன்று நாம் மென்றுணரும் அத்தனையும்,
என்றோ நாம் கண்டுணர்ந்த கனவின் விழைவே!

தேவையில்லையேல் இன்று மொழியிருந்திருக்காது!
தேவையில்லையேல் இன்று எதுவும் பிறந்திருக்காது!

தேவை உள்ளவரை மதிப்புமுண்டு,
இதை உணர்ந்தார் வாழ்ந்தும்முண்டு!

-செல்வா!

No comments:

Post a Comment