கலக்கம் தீர்ந்துபோகும்!
கலக்கம் எல்லாம் தீர்ந்துபோகும்,
கவலை எல்லாம் மாறிப்போகும்!
காலம் எனும் மருந்து உண்டு!
கடமை எனும் நெறியும் உண்டு!
உன்னோடு பயணிக்க உலகம் உண்டு,
எங்கு சென்றாலும் பின்தொடரும் நிலா உண்டு!
எங்கு சென்றாலும் உடன்வரும் விண்மீன் கூட்டம் உண்டு!
கலங்கும் பொழுது மனதிடம் விலக்கிக்கொள்,
பாதை கடினம் தான், ஆனால் பயணம் இனிதே!
கலங்கும் பொழுது மனதிடம் விலக்கிக்கொள்,
பயணம் நெடிது தான், ஆனால் முடிவு இனிதே!
வீசி வரும் மேகத்தை திருப்பி மழையாய் மாற்றும் வல்லமை மலைக்கு உண்டு,
வீசி வரும் சோதனையை திருப்பி சாதனையாய் மாற்றும் வல்லமை நமக்கும் உண்டு!
வாழ்க்கையே நம்பிக்கைதான்,
வாழ்க்கை நம்கைகளில் தான்!
விழி.எழு.விருட்சமாகுக!
-செல்வா!
கலக்கம் எல்லாம் தீர்ந்துபோகும்,
கவலை எல்லாம் மாறிப்போகும்!
காலம் எனும் மருந்து உண்டு!
கடமை எனும் நெறியும் உண்டு!
உன்னோடு பயணிக்க உலகம் உண்டு,
எங்கு சென்றாலும் பின்தொடரும் நிலா உண்டு!
எங்கு சென்றாலும் உடன்வரும் விண்மீன் கூட்டம் உண்டு!
கலங்கும் பொழுது மனதிடம் விலக்கிக்கொள்,
பாதை கடினம் தான், ஆனால் பயணம் இனிதே!
கலங்கும் பொழுது மனதிடம் விலக்கிக்கொள்,
பயணம் நெடிது தான், ஆனால் முடிவு இனிதே!
வீசி வரும் மேகத்தை திருப்பி மழையாய் மாற்றும் வல்லமை மலைக்கு உண்டு,
வீசி வரும் சோதனையை திருப்பி சாதனையாய் மாற்றும் வல்லமை நமக்கும் உண்டு!
வாழ்க்கையே நம்பிக்கைதான்,
வாழ்க்கை நம்கைகளில் தான்!
விழி.எழு.விருட்சமாகுக!
-செல்வா!

No comments:
Post a Comment