மழலை மான்!
மான் கண்ட மழலைக்கு
தேன் உண்ட மகிழ்வோ!
ஈர் மழலை கண்ட மானுக்கு,
மாரி பெய்திட்ட குளிரோ!
கன்று இரண்டு அருகில் நிற்க,
கட்டி இறுகித் தழுவி நிற்க,
காண்பது மா மழையோ,
இது மழலையின்
அன்பு மழையே!
கார் மேகம் தூவாமல் காத்திருக்க,
கனக பூ மலராமல் மௌனிக்க,
பூலோகம் சுற்றாமல் வியக்க,
ஊர் கவனம் இங்கே நிற்க,
பரிமாறுவது அன்புதான்,
மனிதன் மறந்த அன்பை,
மழலை நினைவூட்டட்டும்,
அன்பே என்றும் அறம்,
அன்பே சிறந்த தவம்!
-செல்வா!
மான் கண்ட மழலைக்கு
தேன் உண்ட மகிழ்வோ!
ஈர் மழலை கண்ட மானுக்கு,
மாரி பெய்திட்ட குளிரோ!
கன்று இரண்டு அருகில் நிற்க,
கட்டி இறுகித் தழுவி நிற்க,
காண்பது மா மழையோ,
இது மழலையின்
அன்பு மழையே!
கார் மேகம் தூவாமல் காத்திருக்க,
கனக பூ மலராமல் மௌனிக்க,
பூலோகம் சுற்றாமல் வியக்க,
ஊர் கவனம் இங்கே நிற்க,
பரிமாறுவது அன்புதான்,
மனிதன் மறந்த அன்பை,
மழலை நினைவூட்டட்டும்,
அன்பே என்றும் அறம்,
அன்பே சிறந்த தவம்!
-செல்வா!

No comments:
Post a Comment