செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Friday, 6 December 2019

பார்வை!

பார்வை!

பார்வை அழகானால் தெரிபவை அழகாகும்!
பார்வை தெளிவானால் தெரிபவை தெளிவாகும்!
பார்வை நேர்த்தியானால் தெரிபவை நேர்த்தியாகும்!

காணும் பொருளில் இல்லை அழகு,
காண்பவர் பார்வையில் உள்ளது அழகு!

நோக்கார் நோக்க புதுயுகம் பிறந்தது!
பறவையை நோக்க விமானம் பிறந்தது!
அகிம்சையை நோக்க சுதந்திரம் பிறந்தது!

இருப்பவை உலகில் அங்ஙனமே இருக்கிறது!
பார்ப்பவர்களின் பார்வையில் புதுயுகம் பிறக்கிறது!
பார்வையை தேற்றினால் பார் நம்வசம்!

வாரீர் தேற்றுவோம்!

விழி.எழு.விருட்சமாகுக!

-செல்வா!


No comments:

Post a Comment