செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Saturday, 24 November 2018

தொலையாத வார்த்தைகள்!

தொலையாத வார்த்தைகள்!

வார்த்தைகள் தொலைவதில்லை,
மெல்ல காற்றில் கலந்துவிடுகின்றன,
காற்றின் வழி காதினுள் புகுந்து,
ரீங்காரமிட்டு மனதில் பதிகின்றன!

அக்கறை கொண்ட வார்த்தைகள் ஆளாக்குகிறது!
ஆளுமை கொண்ட வார்த்தைகள் வார்த்தெடுக்கிறது!

பாசமிகு வார்த்தைகள் அன்பை காட்டுகிறது!
பக்குவமான வார்த்தைகள் இதம் தருகிறது!

இனிமையான வார்த்தைகள் கனிவாய் இனிக்கிறது!
காதல் வார்த்தைகள் வாழ்வை பெருக்குகிறது!

தொலையாத வார்த்தைகளால் இவை சாத்தியம்!
நல்லவை நாவின் கண் உதிர்ப்போம்!

தொலையாத வார்த்தைகளால் பலர் வாழ்வை சிறப்பிப்போம்!

விழி.எழு.விருட்சமாகுக!

-செல்வா

No comments:

Post a Comment