செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Friday, 9 November 2018

ஆசை!

ஆசை!

மேகத்தை அள்ளி தெளித்து கோலமிட ஆசை!
வண்ணத்துப் பூச்சியின் சிறகில் பறந்திட ஆசை!

பூத்திருக்கும் பூவிடம் மயங்கி கிடக்க ஆசை!
காத்திருக்கும் நண்டிடம் மழையாய் பொழிய ஆசை!

வானவில் வண்ணத்தை கடன் வாங்க ஆசை!
அதை வாழ்வில் பூசி சிரித்து மகிழ ஆசை!

காந்தம் வாங்கி நல்ல நேரத்தை கவர ஆசை!
உலக பூசையனைத்தும் எனக்கே பலிக்க ஆசை!

வாழ்வு ஒன்று அதை சிறப்பாய் வாழ ஆசை!
இப்படி வாழ்ந்திட எவரும் விரும்பும் படி வாழ ஆசை!

ஆசைகள் அத்தனையும் கைகூட ஆசை!
ஆசைகள் நிறைவேற்றி ஆசைக்கே ஆசானாக வாழ ஆசை!

-செல்வா


No comments:

Post a Comment