கடவுளின் எழுத்துப்பிழைகள்!
படைக்கும் பெரியோனே,
பார்போற்றும் வல்லானே!
உன்னை நான் போற்ற பலகாரணமுண்டு,
அதை நீயே அறிவாய் பரம் பொருளே!
பிழைகள் பிழைத்திருப்பவர்களுக்கில்லை பரமனும் எழுத்துப்பிழை புரிவானா என எண்ணி வியக்கிறேன்!
இத்தனை அழகான உலகில்,
எத்தனை அழகு பார்த்து ரசிப்பதற்கு,
ஏனோ பலருக்கு பார்வையில்லை!
இத்தனை இசையான உலகில்,
எத்தனை ஓசைகள் கேட்டு மகிழ்வதற்கு,
ஏனோ பலருக்கு கேட்கும் திறனில்லை!
இத்தனை பரந்த உலகில்,
எத்தனை பாதைகள் நடப்பதற்கு,
ஏனோ பலருக்கு கால்களில்லை!
இத்தனை மொழி கொண்ட இவ்வுலகில்,
எத்தனை சொல்லின்பம் பேசுவதற்கு,
ஏனோ பலருக்கு பேச குரலில்லை!
இதை காணும் பொழுது ஓர் கனம் நான் நலமாய் இருப்பதற்கு நனி நன்றி மொழிகிறேன்!
மறுகனம் படைத்தவனின் எழுத்துப்பிழையை எண்ணி வியக்கிறேன்.
இதை பிழை என்று உரைப்பதில் ஐயமில்லை இறையே!
அனுதினமும் மாற்றுத்திறனோர் படும் வலி கொடியதே!
அவ்வலி கண்டும் இப்பிழை சுட்டாதிருப்பதே தவறு!
-செல்வா
படைக்கும் பெரியோனே,
பார்போற்றும் வல்லானே!
உன்னை நான் போற்ற பலகாரணமுண்டு,
அதை நீயே அறிவாய் பரம் பொருளே!
பிழைகள் பிழைத்திருப்பவர்களுக்கில்லை பரமனும் எழுத்துப்பிழை புரிவானா என எண்ணி வியக்கிறேன்!
இத்தனை அழகான உலகில்,
எத்தனை அழகு பார்த்து ரசிப்பதற்கு,
ஏனோ பலருக்கு பார்வையில்லை!
இத்தனை இசையான உலகில்,
எத்தனை ஓசைகள் கேட்டு மகிழ்வதற்கு,
ஏனோ பலருக்கு கேட்கும் திறனில்லை!
இத்தனை பரந்த உலகில்,
எத்தனை பாதைகள் நடப்பதற்கு,
ஏனோ பலருக்கு கால்களில்லை!
இத்தனை மொழி கொண்ட இவ்வுலகில்,
எத்தனை சொல்லின்பம் பேசுவதற்கு,
ஏனோ பலருக்கு பேச குரலில்லை!
இதை காணும் பொழுது ஓர் கனம் நான் நலமாய் இருப்பதற்கு நனி நன்றி மொழிகிறேன்!
மறுகனம் படைத்தவனின் எழுத்துப்பிழையை எண்ணி வியக்கிறேன்.
இதை பிழை என்று உரைப்பதில் ஐயமில்லை இறையே!
அனுதினமும் மாற்றுத்திறனோர் படும் வலி கொடியதே!
அவ்வலி கண்டும் இப்பிழை சுட்டாதிருப்பதே தவறு!
-செல்வா

No comments:
Post a Comment