செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Wednesday, 7 November 2018

அனுபவம்!

அனுபவம்!

தடம் பதித்து நடக்க வந்தாய்!
தடுக்கி விழுந்தும் எழுந்தாய்!
படுத்து கிடக்க வரவில்லை,
ஏதேனும் சாதிக்க வந்தாய்!
சோம்பித்திரிய மனதுடன்,
ஏதேனும் கட்டி எழுப்ப வந்தாய்!

எத்தனை தடை தாண்டி புவி சுழல்கிறது?
எத்தனை மடை தாண்டி நீர் ஓடுகிறது?

மனம் கொண்ட மனிதனுக்கோ தடை ஏதுமில்லை!
வழித்தடம் இல்லை எனில் புதிய பாதை பிறக்கும்!

சென்றதை விட்டு விடு!
இயன்றதை தொடர்ந்திரு!
முன்னேறி சென்று கொண்டிரு!
நாளும் வளர்ந்து கொண்டே இரு!

இங்கு தேங்கி நிற்க நேரமில்லை,
புறம் பேசித் திரிந்து புண்ணியமில்லை,
கனவு நினைவாக களத்திலே வேலை செய்!
கனவை நினைவாக்கிய சிலரில் ஒருவனாய் இரு!

விழி.எழு.விழுமியமாகுக!

-செல்வா


No comments:

Post a Comment