மேகம்!
நீர் பிடித்து நிற்கும் மேகமே நில்!
கொஞ்சம் மழையாக வந்திங்கு செல்!
நிலவின் தோழனே நீர் குடித்த மேகமே,
சற்றும் சளைக்காமல் இங்கும் அங்கும் சுற்றித்திரிகிறாய்,
மேலும் கீழுமில்லாமல் இடையில் தொங்குகிறாய்!
நான் எங்கு சென்றாலும் என்னையே பின் தொடருகிறாய்!
இன்றெல்லாம் கடலுக்கு வண்ணமடிக்கும் வேலை இல்லையா உனக்கு?
இரவெல்லாம் நட்சத்திரங்களுடன் கும்மாளம் போடுகிறாய்!
மலையை கண்ட உடனே அருகில் வந்து நலம் விசாரிக்கிறாய்!
மிதக்கும் மேகமே உன்னை போன்று மிதக்க, இங்க பலருக்கு ஆசையே!
மிதக்கும் போதை அறிந்து, பழக்கம் விடாதோரின் ஓசையே அதிகம்!
உன்னைப்போன்று கர்வமில்லாமல் இருக்க மனிதன் கற்றால் போதும்!
ஊரில் உதவி பெருகும், ஏழ்மை குறையும்!
பண்பு சிறக்கும், அன்பு தழைக்கும்!
நாளும் உன் போல் மிதக்க நினைக்கும் யாசகனை நினைவில் கொள்வாய்!
-செல்வா
நீர் பிடித்து நிற்கும் மேகமே நில்!
கொஞ்சம் மழையாக வந்திங்கு செல்!
நிலவின் தோழனே நீர் குடித்த மேகமே,
சற்றும் சளைக்காமல் இங்கும் அங்கும் சுற்றித்திரிகிறாய்,
மேலும் கீழுமில்லாமல் இடையில் தொங்குகிறாய்!
நான் எங்கு சென்றாலும் என்னையே பின் தொடருகிறாய்!
இன்றெல்லாம் கடலுக்கு வண்ணமடிக்கும் வேலை இல்லையா உனக்கு?
இரவெல்லாம் நட்சத்திரங்களுடன் கும்மாளம் போடுகிறாய்!
மலையை கண்ட உடனே அருகில் வந்து நலம் விசாரிக்கிறாய்!
மிதக்கும் மேகமே உன்னை போன்று மிதக்க, இங்க பலருக்கு ஆசையே!
மிதக்கும் போதை அறிந்து, பழக்கம் விடாதோரின் ஓசையே அதிகம்!
உன்னைப்போன்று கர்வமில்லாமல் இருக்க மனிதன் கற்றால் போதும்!
ஊரில் உதவி பெருகும், ஏழ்மை குறையும்!
பண்பு சிறக்கும், அன்பு தழைக்கும்!
நாளும் உன் போல் மிதக்க நினைக்கும் யாசகனை நினைவில் கொள்வாய்!
-செல்வா

No comments:
Post a Comment