செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Wednesday, 21 November 2018

இலவசம்!

இலவசம்!

இலவசம் என்ற ஓர் தொலையாத வார்த்தை!
அரசியல் வாதியின் ஆசை வார்த்தை!
ஒவ்வொரு தேர்தலிலும் புழங்கும் வார்த்தை!
வித விதமான வண்ணம் பூசி வலம் வரும் வார்த்தை!

வளமான வாழ்வு பெற, பசி தீர, பட்டினி தீர
என மீண்டும், மீண்டும் ஒலிக்கும்!
கேட்பவர் மனமோ லயித்துக் குளிரும்!
அன்று தொட்டு இன்றுவரை மாறாமல் ஒலிக்கிறது!

இங்கு எதுவும் இலவசமில்லை,
ஒன்றிற்கு இரண்டாய் வரிகட்ட,
எல்லாம் ஏழை மக்கள் பணமே,
அரசிடம் சென்று திரும்பிவருகிறது!

இலவசம் தவிர்த்து அரசின் கடமை அதீதம்!

படிக்க நல்ல கல்வியகம்,
தரமான மருத்துவமனை,
ஆரோக்கியமான குடிநீர்,
நீர் சேர்க்கும் அணைகள்,
எளிய போக்குவரத்து,
இயற்கை பேணல்,
தவ வேளாண்மை,
உறு பாதுகாப்பு
இது போதும்
மக்களுக்கு
இன்னபிற
அவர்தம்
முயற்சி
தரும்!

கல்வி தரும் நல்வாழ்வு,
வேற்றில் இல்லையே,
மாறுவோம் மாற்றம்
நம்மிடமிருந்தே
தொடங்கட்டும்!

விழி.எழு.விருட்சமாகுக!

-செல்வா






No comments:

Post a Comment