செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Saturday, 17 November 2018

இலை!

நாம் இலையாக இருந்தால்...

சந்தோசமாய்... சுதந்திரமாய்...
தென்றலோடு பேசி!
தேனீக்களுடன் குசு குசுத்து!
சூரியனுக்கு வணக்கம் செய்து!
பறவையின் எச்சம் சுமத்து!
அசுத்தக் காற்றை உட்கொண்டு!
பின்பு சுத்தமாக்கி வெளிவிட்டு!
ஒளிச்சேர்க்கை செய்து!
பச்சை பச்சையாய் தளிர்தது,
மேன் மேலும் வளர்ந்து!
ஓர் உரமாய், சருகாய்,
மருந்தாய், தோரணமாய்...
பயணித்திருக்கலாம்...

இலைபோல் தளிர்க்க வேண்டும்!
சுடும் சூரியனிடம் உள்வாங்கி!
அதை கொண்டு உணவாக்கி!
மரம் தளைத்து நிற்க ஊட்மாகி!
என்றும் பசுமயாய் காட்சித்து!
தென்றலுக்கு சத்தம் தந்து!
வீசும் காற்றிற்கு மணமூட்டி!
பனிக்கு படுக்க இடம் தந்து!

ஏதும் அறியாதவை போல் அமைதியாய்,
பசுமையாய் காட்சியளிக்கிறாய்!
உன் போன்ற வாழ்வு எனக்கும் கிட்ட என் செய்வேன் தாயே!
இயற்கையே!!

-செல்வா

No comments:

Post a Comment