பறவை!
பறவையே உன் கூட்டில் தங்க ஓர் இடம் தா,
ஓர்நாளாவது விரைந்து தூங்கி எழுவேன்!
பறவையே உன் சிறகை ஓர் நாள் கடன் தா!
பரந்த வானில் சுதந்திர காற்றை ஓர்நாள் சுவாசிப்பேன்!
பறவையே உன் தனித்தன்மையை ஓர் கனம் கற்றுத்தா!
தோல்வி கண்டு துவண்டுவிடாமல் ஒவ்வொரு நாளும் உழைப்பேன்!
பறவையே உன் குரலை ஓர்நாள் கடன் தா!
சண்டையிட்ட காதலியை பாடிக் கவிழ்ப்பேன்!
பறவையே உன் சினேகப்பார்வையை சில நேரம் தா!
பேசப் பயப்படும் மனிதர்களிடம் நம்பிக்கையான நட்பை வளர்ப்பேன்!
உன் போல் இருந்தால் மனிதனுக்கு ஏது துன்பம்?
படைத்த நோக்கத்திற்காக வாழ்ந்தால் அதுவே மனிதற்கு இன்பம்...
-செல்வா
பறவையே உன் கூட்டில் தங்க ஓர் இடம் தா,
ஓர்நாளாவது விரைந்து தூங்கி எழுவேன்!
பறவையே உன் சிறகை ஓர் நாள் கடன் தா!
பரந்த வானில் சுதந்திர காற்றை ஓர்நாள் சுவாசிப்பேன்!
பறவையே உன் தனித்தன்மையை ஓர் கனம் கற்றுத்தா!
தோல்வி கண்டு துவண்டுவிடாமல் ஒவ்வொரு நாளும் உழைப்பேன்!
பறவையே உன் குரலை ஓர்நாள் கடன் தா!
சண்டையிட்ட காதலியை பாடிக் கவிழ்ப்பேன்!
பறவையே உன் சினேகப்பார்வையை சில நேரம் தா!
பேசப் பயப்படும் மனிதர்களிடம் நம்பிக்கையான நட்பை வளர்ப்பேன்!
உன் போல் இருந்தால் மனிதனுக்கு ஏது துன்பம்?
படைத்த நோக்கத்திற்காக வாழ்ந்தால் அதுவே மனிதற்கு இன்பம்...
-செல்வா

No comments:
Post a Comment