சாதி என்னும் சதி!
காதல் கூட இன்று சாதி பார்த்துத்தான் ஒன்று சேரும்,
இல்லையேல் இடையில் இருமினாற் போல் அந்து போகும்!
வள்ளுவன் வாழ்ந்து ஈராயிரம் ஆண்டு கழிந்த பின்னும்,
கழியாமல் வீசுதிந்த சாதி நாற்றம் இன்னும்!
வேர்விட்டு வளர்ந்திட்ட சாதி இன்று விழுதோடு நிற்குது!
எங்கு ஓடி ஒளிந்தாலும் விடாமல் துரத்துது,
பிறப்பிலே வந்தது சவக்குழி வர தொடருது!
படிப்பு கொடுத்தா முன்னேறி மறந்திடுவான்னு, சோறு போட்டு படிக்க வச்சா.
இன்னைக்கு படிச்சுப்புட்டு தனித்தனியா ஆளுக்கொரு சாதிச்சங்கம் வச்சான்.
இருந்த தலைவரை எல்லாம் சாதி வாரியா பிரிச்சிட்டான்,
அவர் பேரு புகழ சுருக்கிட்டான்.
பிரிந்து நின்றே இனத்தை காவு கொடுத்திட்டான்!
தமிழினம் என்ற பெருமை மறந்து,
சாதி என்னும் சிறுமையிலே தங்கிட்டான்!
இனி என்ன இருக்கு இவனிடம் மிச்சம்!
பல சாதிக்கொடி தான் பறக்குது உச்சம்!
இது தமிழினத்திற்கான அச்சம்!
விழித்திட்டால் ஏற்படும் மாற்றம்!
-செல்வா
காதல் கூட இன்று சாதி பார்த்துத்தான் ஒன்று சேரும்,
இல்லையேல் இடையில் இருமினாற் போல் அந்து போகும்!
வள்ளுவன் வாழ்ந்து ஈராயிரம் ஆண்டு கழிந்த பின்னும்,
கழியாமல் வீசுதிந்த சாதி நாற்றம் இன்னும்!
வேர்விட்டு வளர்ந்திட்ட சாதி இன்று விழுதோடு நிற்குது!
பெரும் காற்றிலும், புயலிலும் அது விழாம தப்புது!
எங்கு ஓடி ஒளிந்தாலும் விடாமல் துரத்துது,
பிறப்பிலே வந்தது சவக்குழி வர தொடருது!
படிப்பு கொடுத்தா முன்னேறி மறந்திடுவான்னு, சோறு போட்டு படிக்க வச்சா.
இன்னைக்கு படிச்சுப்புட்டு தனித்தனியா ஆளுக்கொரு சாதிச்சங்கம் வச்சான்.
இருந்த தலைவரை எல்லாம் சாதி வாரியா பிரிச்சிட்டான்,
அவர் பேரு புகழ சுருக்கிட்டான்.
பிரிந்து நின்றே இனத்தை காவு கொடுத்திட்டான்!
தமிழினம் என்ற பெருமை மறந்து,
சாதி என்னும் சிறுமையிலே தங்கிட்டான்!
இனி என்ன இருக்கு இவனிடம் மிச்சம்!
பல சாதிக்கொடி தான் பறக்குது உச்சம்!
இது தமிழினத்திற்கான அச்சம்!
விழித்திட்டால் ஏற்படும் மாற்றம்!
விழி.எழு.ஒன்றுபடு!
-செல்வா

No comments:
Post a Comment