செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Wednesday, 1 August 2018

வாலிபம்!

வாலிபம்!

வாலிபம் மரணம் வரை மனிதன் வாழ விரும்பும் பருவமது!
மது தரும் போதையும்,
மதி கெடும் பேதையும் விலக்கி வைத்திருப்பவர்கள் சிலரே!

அவ்வாறு இலரே மாதுவின் மயக்கமாய்! காமத்தில் கலக்கமாயிருப்பர்!

இப்படியுமிலரேல் சூதிர்க்கு அடிமையாய்,
நேரவிரயமாக்கும் வீரராய் வீற்றிருப்பர்!

இம்மூன்றிலிருந்து தப்பியவன்!
வாலறிவன்!
ஐம்புலத்தை அடக்கி ஆள்பவன்!

பாரதி கூறினான் இளமையில் வறுமை கொடியது என்று!
ஆனால் இக்காலம் அதற்கு நேர்மாறானது!

இளமையில் வறுமை ஆகச்சிறந்தது!
வறுமை மது, மாது, சூது இம்மூன்றிலிருந்தும்,
வாலிபனை விலக்கி வைக்கும்!

இம்மூன்றிலிருந்து மீண்டவன்!
இன்னொரு விவேகா ஆவான்!
ஆற்றல் மிகுந்த வாலிபத்தை அடக்கி ஆளும்,
வல்லமை ஒவ்வொரு இளைஞருக்கும் வேண்டும்!

சோம்பித் திரியாமல்!
கற்பவைகளை கற்று!
திறமைகளை வெளிக்கொணர்ந்து!
அறிவான சமுதாயத்திற்கு வித்தாய்!
முளைவிட்டு வேர்பிடித்து!
மரமாய் வளர்ந்து பயன்தருக!

இந்த உலகம் நமக்கு அளித்த வாழ்விற்க்கு!
இரட்டிப்பு பலன்தருக!

விழு! எழு! விருட்சமாகுக!

-செல்வா

No comments:

Post a Comment