வாழ்க்கை பயணம்!
வாழ்க்கை பயணம் தொடங்கிய இடத்தில் முடிகிறது சற்று அனுபவங்களுடன்!
வாழ்வில் நாம் நாமாக இருப்போம்,
பிடித்தவர்கள் உடன் பயணிப்பார்கள்,
பிடிக்காதவர்கள் வழியில் இறங்கிவிடுவார்கள்...
இறங்கியவர் இடத்தை இன்னொருவர் நிரப்புவார்,
இல்லையேல் சில நேரம் காலியான இருக்கையுடனே பயணங்கள் தொடரலாம்.
துணைக்கு ஆள் இல்லாத பயணம் எல்லாம் வீண் இல்லை!
பல நேரங்களில் தனியாக நடப்பவர்கள் வெகுதூரம் பயணிக்கிறார்கள்!
தூரம் சிறிதாக தோன்றும் துணை இருப்பின்!
கற்றுக்கொண்டே இருந்தால் வாழ்க்கை எளிதே!
செல்லும் வழி முழுவதும் நோக்கிச்சென்றால் தொல்லையில்லை!
நோக்காவிடின் மேடும், பள்ளமும் புரட்டி புரட்டி போடும்!
காலம் என்னும் கருவியில் நாம் செய்யும் பயணம் பதிவாகிறது!
பதியும் படி வழி நெடுக நடந்தால் அது காலத்திற்கு சன்மானமே!
வேகம் அறிந்து, இளைப்பாறி, களைப்பாறி, பதற்றப்படாமல் பயணிப்போம் வாழ்க்கை பயணம் இனிதே!
-செல்வா
வாழ்க்கை பயணம் தொடங்கிய இடத்தில் முடிகிறது சற்று அனுபவங்களுடன்!
வாழ்வில் நாம் நாமாக இருப்போம்,
பிடித்தவர்கள் உடன் பயணிப்பார்கள்,
பிடிக்காதவர்கள் வழியில் இறங்கிவிடுவார்கள்...
இறங்கியவர் இடத்தை இன்னொருவர் நிரப்புவார்,
இல்லையேல் சில நேரம் காலியான இருக்கையுடனே பயணங்கள் தொடரலாம்.
துணைக்கு ஆள் இல்லாத பயணம் எல்லாம் வீண் இல்லை!
பல நேரங்களில் தனியாக நடப்பவர்கள் வெகுதூரம் பயணிக்கிறார்கள்!
தூரம் சிறிதாக தோன்றும் துணை இருப்பின்!
கற்றுக்கொண்டே இருந்தால் வாழ்க்கை எளிதே!
செல்லும் வழி முழுவதும் நோக்கிச்சென்றால் தொல்லையில்லை!
நோக்காவிடின் மேடும், பள்ளமும் புரட்டி புரட்டி போடும்!
காலம் என்னும் கருவியில் நாம் செய்யும் பயணம் பதிவாகிறது!
பதியும் படி வழி நெடுக நடந்தால் அது காலத்திற்கு சன்மானமே!
வேகம் அறிந்து, இளைப்பாறி, களைப்பாறி, பதற்றப்படாமல் பயணிப்போம் வாழ்க்கை பயணம் இனிதே!
-செல்வா

No comments:
Post a Comment