செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Friday, 24 August 2018

ஆர்வம்!

ஆர்வம்!

புதுக்கவிஞனும் இல்லை!
புதிய தலைப்புமில்லை!
தேர்ச்சி பெற அவசியமுமில்லை!
காலத்தில் முடிக்கும் கடமையுமில்லை!
கருத்து தெரிவிக்கும் கட்டாயமுமில்லை!

பின் ஏன் இந்த ஆர்வக் கோளாறு என்று எண்ணி எண்ணி வியக்கிறேன்!
படைப்பாளியாக மாறாத காரணமோ!
கவிஞனாக உணராத காரணமோ!

கற்பனை வடித்துவிட்டு,
ஓரம் நின்று ரசித்தால் போதும்! 
சிறந்த கல் சாமியாகும்!
சிதறிய கல் படியாகும்!
பொறுமை கொள் மனமே!

-செல்வா...

No comments:

Post a Comment