செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Tuesday, 14 August 2018

சுதந்திரத் திருநாள்!

சுதந்திரத் திருநாள்!

பலர் வீதியில் இறங்கி வென்றெடுத்த சுதந்திரம்!
வெள்ளை கொள்ளையனை விரட்டி வாங்கிய சுதந்திரம்!
அறவழியில் உலகில் நின்று வென்ற சுதந்திரம்!
சிதறிய தேசத்தை இணைத்து கோர்த்த சுதந்திரம்!
பல மேன் மக்கள் குருதியில் கிட்டிய சுதந்திரம்!

சுதந்திரம் என்ற இன்பத்தில்  திளைக்குது என்தேசம்!
உரிமையை மீட்ட நாளின் பெருமை பேசுது என்தேசம்!
தியாகிகளை நினைத்து மகிழுது என்தேசம்!
மகிழ நிறைய இருப்பினும், களைய நிறைய இருப்பினும்!
இரண்டிற்கும் இடையில் வளருது என்தேசம்!

உலகில் காணகிடைக்காத வேற்றுமைகள்!
அதனுள் சிறந்து விளங்கும் ஒற்றுமைகள்!
இங்கு தவிர எங்கும் காணாது!

எண்ணத்தில் உள்ள வேற்றுமையை ஒழிப்போம்!
வீட்டில் உள்ள சாதிகளை ஒழிப்போம்!
வீதிகளில் உள்ள தீண்டாமையை ஒழிப்போம்!
ஊரில் உள்ள குப்பைகளை ஒழிப்போம்!
நாட்டில் உள்ள தீவிரவாதத்தை ஒழிப்போம்!

அன்று ஒலிக்கும் இந்த சுதந்திரமணி,
கேட்காதவரின் காதை துளைக்கும்!
கரம் சேர்ப்போம், தூய பாரதம் படைப்போம்!

வாழ்க பாரதம்! வாழ்க தமிழ்நாடு!

-செல்வா

No comments:

Post a Comment