செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Thursday, 30 August 2018

பெண்மை ஓர் தவம்!

பெண்மை ஓர் தவம்!

ஓ பெண்ணே எத்தனை சவால் உன் முன்னே!
ஜனிக்கும் முன்பே போராட்டம் உன் முன்னே!

கருவிலிருந்து பெண் சிசுவாய் தப்பினாய்!
கள்ளிப்பால் கயவர்களிடமிருந்து தப்பினாய்!

பள்ளி செல்ல பாலராய் அடைபடாமல் தப்பினாய்!
மங்கையான பின்பு மீண்டும் பண்பினால் கற்க தப்பினாய்!
படித்த பின்பு பணி செல்ல மீண்டும் தடை தாண்டினாய்!

நங்கை உனக்கு எத்தனை தடைகள்!
மங்கை உனக்கு அத்தனையும் படிகள்!

இன்று நீ இல்லாத துறை இல்லை!
சாதிக்க வேண்டிய எல்லைக்கு மறுவரையறை செய்தாய்!
ஏறு முன்னேறு உன் பின் உள்ளவர்களுக்கு வழிசெய்!

இன்றும் நமதே!
நாளையும் நமதே!
முயற்சி நமதெனில்!

விழி.எழு.விருட்சமாகுக!

-செல்வா

No comments:

Post a Comment