செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Saturday, 1 September 2018

பத்ம வியூகம்!

பத்ம வியூகம்!

பாரதம் படித்தோர் அறிவர் பத்மவியூகம்!
பலம் குன்றினும், படைகுன்றினும்,
வியூகம் சிறப்பாக அமைவின் வெற்றி நமதே!

எல்லா வியூகத்திலும் வல்லவன் பார்த்தான்!
வியூகத்தை உடைப்பதிலும், உட்செல்வதிலும், வெல்வதிலும் வல்லான்!
பக்திக்கும், புத்திக்கும் வெற்றி என கண்ணன் அவன் புறம் நின்றான்!
உடல் நுணுக்கம் மட்டும் போதா, மதி நுணுக்கம் மிக்கவன் வல்லான்!
என ஒவ்வொரு முறையும் நிறுபித்தான் பார்த்தான்!

தாமரை மலர் போல சூழும் வியூகம் தனை!
தனதாக்கி வென்று முடித்தான் பார்த்தான்!
மதியின் வழி சென்று உடல் வாகுடன் போரிட்டான்!
மாற்றான் எவனாகினும் அஞ்சான் ஆனான்!
மதியின் கண் செயல் புரிந்தாகினான்! 
வெற்றி சூளுறை அவனிடம் நணுகியதே! 

-செல்வா


No comments:

Post a Comment