செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Saturday, 15 September 2018

நெருக்கடி நிலை!

நெருக்கடி நிலை!

வாழ்க்கை நெரிசலில் நெருங்கும் பொழுது,
நமக்கானவர்களின் தேடல் மிகஅதிகமாவது இயல்பே!

துணையில்லா கன்றிற்கு துணையாக யார் வருவார்!
இணையில்லா இளைஞர்க்கு இணையாக யார் வருவார்!
இணையும் துணையும் பிறப்பதில்லை மனதில் உடன் இருப்பதே!
நம்பிக்கை என்னும் உறுதுணையே!

சுழலின் மத்தியில் சிக்கியவன் போல் எவ்வளவு எழினும் உதவிக்கு ஓர் கரம் வேண்டும்!
அந்த கரம் நம்பிக்கையாய் எல்லோருக்கும் அமைய வேண்டும் தன்னம்பிக்கையாய்!

தேனீயைவிட நாம் கூடுதலாக முயற்சி செய்ய வேண்டும்!
எறும்பை விட சுறுசுறுப்பாக ஓர் வழி அடைபடின் மற்றோர் வழி தேட வேண்டும்!
காற்றைவிட வேகமாக வீசி நல்ல எண்ணம் மனதில் பரப்ப வேண்டும்!

நதியின் பாய்சல் கடலை நோக்கியே அதுபோல் உனது பாய்ச்சல் இலக்கை நோக்க வேண்டும்
நாம் காணும் இடரான வழியை சீராக்கினால் பயணம் துரிதப்படும்!
விவேகமாய் விரைவாய் பயணிப்போம்,
சீரான வேகம் கொள்வோம் இலக்கு ஒன்றே குறியாகும் தடைகளல்ல!

விழி.எழு.விருட்சமாகுக!

-செல்வா

No comments:

Post a Comment