செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Thursday, 20 September 2018

தமிழ்!

தமிழ்!

எழுத்துக்களின் அழகிய பிணைப்பே!
மொழியின் உண்மையான உயிர்ப்பே!
சொற்கள் தான் அதன் சொற்கள் தான்!

ஓர் அணுவின்றி எவ்வுயிரும் இயங்கா!
எழுத்தின்றி எச்சொற்களும் பிறவா!
சொல்லின்றி மொழி தனித்து நிற்கா!

மகத்தான தமிழின் சிறப்பே,
கொட்டிக்கிடக்கும் சொற்களே!
எதை தேடினாலும் அதற்கான விடை தமிழினுள்ளே!

இத்தனை சீரிய தமிழை சீர்பட பேசுவோம்!
சிந்தனையில், பேச்சில், எழுத்தில் தமிழ் செய்வோம்!
ஆழமான தமிழை ஆராய்ந்து முத்தெடுக்காவிடினும்!
குளித்து,களித்து இன்புறுவோம்!
நம் தமிழ் கடலில் நீந்திப்பழகுவோம்!

வாழ்க தமிழ்!
வளர்க தமிழர்!
வாழிய செந்தமிழ்நாடு!

-செல்வா

No comments:

Post a Comment